Connect with us

விளையாட்டு

சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்! -சதிஷ் குமார்

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna.

Published

on

Photo: Shutterstock

1989’ல் இருந்து சுமார் 2013 வரை தனெக்கென முத்திரைப் பதித்து எதிர் அணிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். “பேரைக் கேட்ட சும்மா அதிருதுல” என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த படத்தில் வரும் வசனத்தைப் போல, இவர் பேரைக்கேட்டால் அஞ்சாத பந்து வீச்சாளர்கள் உலக கிரிக்கட் வரலாற்றில் இருக்கவே முடியாது. பல சாதனைகளுக்கு சொந்தக்காரர், கிரிக்கெட் வீரர்களுக்கு இவர் ரோல் மாடல், களத்தில் இறங்கினால் ஒன்னு மேன் ஷோ(ஆர்மி). இன்னும் சொல்லவேண்டும் என்றால் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் மாபெரும் சாகப்தம். அட யாருய்யா? இந்த சச்சின் ? என்று இன்றைய 2கே கிட்ஸ் கேட்பதைப் போல் 90களில் நானும் கேட்டதை இங்கு நினைவூட்டுகிறேன்.

ஆர்வத்தை தூண்டிய சச்சின்

எங்கு பார்த்தாலும் இவரைப் பற்றியே பேச்சு என்னுடைய சிறு வயதில் எனக்கு கிரிக்கெட் பார்ப்பதில் பெரிய ஆர்வம் கிடையாது, கிரிக்கெட் விளையாட மட்டுமே பிடிக்கும். நண்பர்களுடன் விளையாடும் பொழுது, முதல் நாள் நடந்த மேட்ச் பற்றியும் அதில் சச்சின் ஆடிய விதத்தை பற்றியும் பல நேரம் பேசி விளையாட்டு நேரத்தை வீணடித்து என்னையும் கடுப்பேற்றி விடுவார்கள்(விளையாடாமல் சச்சினைப் பற்றி பேசி ). பல முறை சச்சின் சீக்கிரம் அவுட் ஆகி வெளியேற வேண்டும் என கடவுளிடம் வேண்டியதும் உண்டு, காரணம் என் சகோதரர் உடன் விளையாடும் பொழுது டிவியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டின் இடையே ஓடி சென்று பார்த்து விட்டு வருவார், பல முறை சச்சின் விளையாடும் பொழுது பலரைப் போன்று அவரும் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பமாட்டார்.

இந்தியா விளையாடும் கிரிக்கெட் மேட்ச் என்றால் வீட்டில் எனக்கு டிவி பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காரணம் வீட்டில் இருக்கும் அப்பா, சித்தப்பா, அண்ணன் என மெஜாரிட்டி கூட்டம் கிரிக்கெட் விரும்பிகள் என்பதால். 90களில் அறியதாக ஒளிபரப்பப்படும் டாப் 10 பாடல், திரைப்பட விமர்சனம், நாடகம் என எதையும் பார்க்கவிடாமல் செய்து விடும் இந்த கிரிக்கெட். சச்சின் சீக்கிரமாக வெளியேறினால் (அவுட் ஆனால்) எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் (டிவி பார்க்க). அந்த நேரத்துக்காக பல நாள் காத்துக்கிடந்துளேன். ஒரு கட்டத்தில் என்ன தான் (சச்சின்) அப்படி விளையாடுகிறார் என பார்க்கவேண்டும் என்று எண்ணம் என்னுள் வந்தது அன்று இந்தியாவிற்கு எதிராக விளையாடியது உலக சாம்பியன் அணிகளின் ஒன்றான வெஸ்ட்இண்டீஸ். சச்சின் அன்று அடித்தது 60 ரன்கள் தான் ஆனால் அவர் ஆடிய (ஸ்டைல்) விதத்தைப் பார்க்கும் பொழுது கிரிக்கெட்டை இவ்வுளவு அழகாக விளையாட முடியுமா? என்ற எண்ணம் என்னுள் வந்து சென்றது. இவர் பெரிய ஆட்டக்காரன் தான்யா என்ற வசனம் எனக்குள் அன்றே தோன்றியது. கிரிக்கெட்டின் தீவிர ரசிகனாக நான் மாற சச்சினின் ஆட்டம் மிக முக்கியமானதாக அமைந்தது.

சச்சினுடன் ஆடிய ஜாம்பவான்கள் :

அன்று முதல் இன்று வரை இவரின் தீவிர ரசிகனாகவே இருக்கின்றேன். இவர் ஆடிய காலகட்டத்தில் சச்சின் அவுட் என்றல் டிவியை ஆப் செய்துவிட்டு சென்ற பல பேரை (எங்கள் வீடு உற்பட) நான் பார்த்துள்ளேன். சச்சின் ஆடினால் தான் இந்தியா வெற்றிப் பெற முடியும் என்ற காலம் அது. இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவரின் ஆட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படி தெரிந்திருந்தால் இவரை இணைத்து வேறு ஒரு கிரிக்கெட் வீரர் உடன் ஒப்பிட தயங்குவார்கள்.காரணம் அன்று இவருக்கு எதிர் அணியில் பந்து வீசிய மெக்ராத், டேவிட் பூன், பிரெட் லீ, ஷனே வார்னே, வால்ஷ், அம்ப்ரோஸ், ரோஸ், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஷாகிளைன் முஸ்தாக், அஃகுப் ஜாவேத், சோயிப் அக்தர், ஆலன் டொனால்ட், போலாக், ஆலன் கோவ்ச், முரளிதரன் என பட்டியல் நீளும். மேலே குறிப்பிட்டுள்ள வீரர்கள், பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் .

சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்பட வசனத்தை இந்தத் தருணத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன் அதாவது ” பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்ல சச்சின்! இவர் அடிச்ச பத்து பேரும் மிகப்பெரிய டான் தான்! ஆம் முன்பு குறிப்பிட்ட வீரர்கள் மிகப் பெரிய ஜாம்பவான்கள் பல சாதனைகளைப் படைத்தவர்கள். உலக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை தங்களது பந்துவீச்சின் மூலம் திணறடித்தவர்கள். இவர்களின் பந்து வீச்சை சமாளிப்பதே பெரும் பெரும் போராட்டமாக இருந்த காலம் அது. இது மட்டும் இன்றி இன்று இருக்கும் விதிமுறைகள் (எளிய முறைகள்) அன்று இல்லை, ஒரு அணி 270 ரன்கள் மேல் அடித்தலே அது சிறந்த ஸ்கோர் ஆக இருந்தது. அதிலும் பலமுறை சச்சினுக்கு தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டுள்ளது, அன்று டிஆர்எஸ் விதிமுறைகள் இருந்திருந்தால் இன்னும் பல சதங்களை (சாதனைகளை) தனது கணக்கில் எழுதியிருப்பார் சச்சின்! .

பேட்டால் பதில் தந்த சச்சின்!

என்னைப் போல சிறந்தபந்து வீச்சாளர்கள் எவரும் இல்லை என காலரை உயர்த்திய பல வீரர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதில் தந்தவர் சச்சின். ஒருமுறை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1998ல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டனர். இந்தியாவில் கால் வைத்த முதல் வேலையாக சச்சின் டெண்டுல்கரை சீண்ட ஆரம்பித்தார்கள் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், அதாவது இவரை(சச்சின் ) எளிதில் அவுட் ஆக்க வழிமுறைகள் இருப்பதாகவும், கண்டிப்பாக விரைவில் அவரின் விக்கட்டைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம் எனவும் பேட்டியளித்தனர். பலர் வீரர்கள் இவரை சீண்டினாலும் தனது அமைதியாலும், தனது புயல்வேக ஆட்டத்தினாலும் பதில் தந்து அவர்களை வாய் அடைக்க வைத்தவர் சச்சின். இதில் ஷனே வார்னே மட்டும் விதி விலக்க என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய இரண்டாவது பந்தில் பௌண்டரி அடித்த சச்சின், அடுத்த பந்தில் அவுட்டாகி வெளியேறியது இவர்கள் கூறியதை உறுதிப் படுத்தும் விதமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் சச்சின் விளையாட வரும் பொழுது அனைவருக்கும் இருந்த ஒரு கேள்வி எப்படி வார்னே சூழலை எதிர்கொள்ளப் போகிறார்?. என்பதுதான்! அன்று தனது பேட்டிங்கின் மூலம் அனைவருக்கும் பதில் தந்ததை பலர் மறந்திருக்கலாம், ஆனால் ஷனே வார்னே மறந்திருக்க வாய்ப்பே இல்லை.

இதே போல ஜிம்பாபே அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில், ஜிம்பாபே அணியின் மிக வேகப்பந்து வீச்சாளரான (148கிமி வேகம்) ஹென்றி ஒலாங்கோ சச்சினின் விக்கட்டை கைப்பற்றி ஆரவாரம் செய்து சில சைகைகள் காட்டி இருப்பார். அதற்கு எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல், இரண்டு நாட்கள் கழித்து ஜிம்பாபே எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அவரின்(ஹென்றி ஒலாங்கோ) பந்து வீச்சை நாலா புறமும் விளாசி ஒரே ஓவரில் 3 சிக்சர் அடித்து அதிரடி சதம் கண்டு இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, தான் கிரிக்கெட்டின் பிதாமகன்! என நிரூபித்து இருப்பார் சச்சின். அதன் பின்னர் ஹென்றி ஒலாங்கோ பெரிய பௌளராக கோலோச்ச முடியவில்லை என்பதே வருத்தமான செய்தி.

இதுபோல சுவாரசியமான காட்சிகள் பல நடந்துள்ளது அனைத்தையும் விவரிக்க இந்தக் கட்டுரை போதுமானது அல்ல. இருந்தாலும் இறுதியாக ஒரு சச்சினின் ரசிகனாக என்றும் பெருமை கொள்ளும் தருணமாக மனதில் இருப்பதில் இதுவும் ஒன்று “அதாவது ஆஸ்திரேலியா அணியின் சூழல் பந்து வீச்சாளரான பிராட் ஷாஜி இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் சச்சினனை கிளீன் போல்டு செய்து அவுட் ஆக்கினார், போட்டி முடிந்த பின்னர் சச்சினிடம் தான் வீசிய பந்தினை எடுத்து சென்று ஆட்டோகிராப் வாங்கியுள்ளார், பிராட் ஷாஜி. அதில் சச்சின் எழுதிய வார்த்தைகள் அந்த பந்தில் இன்றும் அழிக்க முடியாத வார்த்தையாக மின்னுகிறது. அதில் அவர் எழுதியது    “இதுபோன்று இன்னொரு முறை நடக்காது” (It will never Happen again) என்று எழுதியுள்ளார். அதாவது இனி வரும் காலங்களில் என் விக்கெட்டை நீ எடுக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். அதற்கு பின்னர் சுமார் 21 முறை பிராட் ஷாஜி பந்தினை எதிர்கொண்ட சச்சினின் விக்கட்டை வீழ்த்த முடியவில்லை.கிரிக்கெட்டில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து நொறுக்கி மாபெரும் வீரர் என தன்னை பல முறை நிரூபித்துக் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

ரத்தத்தில் செதுக்கிய முதல் அரை சதம்!

1989ல் முதன் முதல் களமிறங்கிய சச்சினுக்கு பலப்பரிச்சைக் காத்துக் கொண்டிருந்தது. காரணம் எதிர் அணியாக விளையாடியது, பலம் கொண்ட பாகிஸ்தான் அணி.பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க டிரா செய்ய வேண்டும். இப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் 54 ரன்களுக்கு 4 விக்கட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 16 வயது இளம் வீரரான சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி ஒரு ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வாக்கர் யூனிஸ் வீசிய பந்து முகத்தில் பட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை பெவிலியனுக்கு அழைத்து செல்ல மருத்துவ ஆலோசனையாளர்கள் முடிவு செய்தனர். இதனை பாகிஸ்தான் வீரர்கள் கிண்டல் செய்யும் விதமாக பல வார்த்தைகள் அவரின் மேல் விழ, இந்தியாவை தோல்வியில் இருந்து காக்க வேண்டிய முழு பொறுப்பையும் சச்சின் தாங்கினார். யுத்தம் என்றால் ரத்தம் வரத்தான் செய்யும் அதைக் கண்டு அஞ்சுபவன் நான் இல்லை என்ற தோணியில் களத்தில் ஆடத் தொடங்கினார் அன்று அவர் அடித்த ரன்கள் 57.

 

சச்சின் தனது 18 வயதில் சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடியது முன்னணி வீரர்களின் புருவங்களை உயர்த்திப் பார்க்க வைத்தது.
எதிர் திசையில் விளையாடிய ஆலன் போர்டார் ஏதே அதிசயம் நிகழ்வது போல் இருப்பதாக கூறியுள்ளார்நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்,அவர் இந்தியாவுக்காக நான்காவது இடத்தில் பேட் செய்கிறார் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மெத்திவ் ஹேடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக்கோப்பை வெல்வதே கனவு !

உலகக்கோப்பை வெல்வதே எனது கனவு அதுவே எனது லட்சியம் என பலமுறை தெரிவித்துள்ளார் சச்சின். இவர் ஆடிய 1992, 1996,1999, 2003, 2007 ஆகிய உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது சச்சினை மனதைபெரிதும் பாதித்தது.

“காயப்பட்ட சிங்கம் சீறினாள் முடிவு பயங்கரமாக இருக்கும், பல நாள்
வெறி கண்டிப்பாக வேட்டையாடியே தீரும் என பலரும் அறிந்திருந்ததே…”

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பைப் போட்டிக்கு களம் இறங்கியது. அதிரடியாக ஆடக்கூடிய சேவாக், நல்ல பார்மில் இருந்த கம்பிர், தனது அதிரடியால் எதிரிகளை ஆட்டம் காண வைக்கும் யுவராஜ், இளம் வீரர் கோலி, அதிரடி கேப்டன் தோனி என பலர் இருக்க எதிர் அணியினரின் கண்கள் அனைத்தும் சச்சின் மேல் தான் இருந்தது. காரணம் “காயப்பட்ட சிங்கம் சீறினாள் முடிவு பயங்கரமாக இருக்கும், பல நாள் வெறி கண்டிப்பாக வேட்டையாடியே தீரும் என பலரும் அறிந்திருந்ததே.ஆம் பல நாள் பகையை பெரும் வலியோடு சுமந்து கொண்டிருந்த அந்த சிங்கம், தனது குட்டியுடன் சீறிப் பாய ஆரம்பித்தது அதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியா வென்று மிஸ்[மாபெரும் சாதனைப் படைத்தது.2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இவர் அடித்த ரன்கள் 482 இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதமாகும்.

சச்சின் தனது அணியினர் தோல்விகளில் சோர்ந்து நின்ற போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளித்தவர்.யுவராஜ் சிங் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வர, அவரிடம் தனியாக சுமார் அரை மணிநேரம் உரையாடி அவரை மீண்டும் பார்முக்கு வர உதவியவர். இதன் காரணமாக 2011 ஆண்டு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதைப் பெற்றார் யுவராஜ் சிங்.

பாகிஸ்தான் வீரர் அன்வர் ஒரு நாள் போட்டியில் அடித்த 194 ரன்கள் தான் பல நாள் சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்தார். இருநூறு ரன்கள் அடித்த முதல் வீரர் சச்சின் என்ற பெருமை பெற்றார் அன்று உலகமே இவரின் இரைட்டை சதத்தை பாராட்டியது. இன்று பலர் எளிதாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடிக்கின்றனர் ஆனால் இதற்கு விதை சச்சின் போட்டது. இவர் அடித்த பின்னர் பலரும் இரட்டை சதம் அடித்திருந்தாலும். ஒரு நாள் கிரிக்கெட்ப் போட்டியில் இரட்டை சதம் என்றால் முதலில் ஞாபகம் வருவது சச்சினின் இரட்டை சதம் தான்.

பாராட்டைக் கேட்டு வாங்கிய சச்சின்!

சச்சினின் பறிச்சியாளர் இரமாகாந்த் அச்ரேக்கர் அவர்கள் சச்சின் பல சாதனைகளைப் படைத்தபோது கூட பெரிதாகப் பாராட்டியதில்லையாம். இதற்கு காரணம் பாராட்டினால் தலைக்கனம் வந்து விடும் என்பதால் பாராட்டுவதை தவிர்த்து வந்துள்ளார். ஒரு முறை சச்சின் பறிச்சியாளர் இரமாகாந்த் அச்ரேக்கர் அவர்களிடம் சென்று சார் என்னை இப்பொழுதாவது பாராட்டுகள் ஏன் என்றால் மீண்டும் நான் விளையாட்டுப் போவது இல்லை என உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார். 24 ஆண்டுகள் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத பிதாமகனாக கிரிக்கெட்டில் உலகில் கோலோச்சி, முடிசூடா மன்னனாக விளங்கி வருகிறார் சச்சின் டெண்டுல்கர் .

சச்சின் என்றாலே சதம் என்பது அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கிடைத்த பெயர். பல முறை 80 ரன்களிலும், 90 ரன்களிலும் வெளியேறியுள்ளார். இப்படி 80, 90 ரன்களில் வெளியேறும் பொழுது கூட சச்சின் ஆடுவதே இல்லை என்ற பேச்சு எதிரொலிக்கும், காரணம் இவரிடம் அனைவரும் எதிர்பார்ப்பது சத்தத்தை மட்டும் தான். இதனால் தான் பலமுறை அரை சதம் அடித்தும் கூட இவர்பேசும் பொருளாக இருந்துள்ளார்.

தி டான் அப் கிரிக்கெட் !

உலகமே போற்றும் வீரராக உயர்ந்தது தனது கடினமான உழைப்பால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 24 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் கிங் ஆக வளம் வருவது எளிதான விஷயம் இல்லை. 24 ஆண்டுகளாக ஒரு கிரிக்கெட் அணியை தூக்கி சுமந்த மாபெரும் வீரர் “தி ரியல் லெஜெண்ட்” சச்சின் டெண்டுல்கரை தாண்டி யாரும் இருக்க முடியாது என்பதே பலரின் கருத்து, அதுவே எனதும் கூட…

இன்று பல வீரர்கள் வரலாம் தங்களில் திறைமைகளால் பல சாதனைகளைப் படைக்கலாம், ஏன் சச்சின் சாதனையை கூட முறியடிக்கலாம். ஆனால் என்றும் இன்னொரு சச்சின் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கிடைக்கப் பெறாது என்பதே நிதர்சனமான உண்மை.

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பேசும் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள இவர் என்றுமே ஒரு சகாப்தம் தான் . இன்று தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லும் பல கோடி ரசிகர்களின் ஒருவனாக நான் இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன் !

வளர்க கிரிக்கெட்! வெல்க இந்தியா! வாழ்க சச்சினின் புகழ்!

சதிஷ் குமார் ( E -Behind )

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் !

Published

on

By

ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபையர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, ஜூன் 1 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்தது. ஜானி பேயர்ஸ்டோவ் (38), திலக் வர்மா (44), மற்றும் சூர்யகுமார் யாதவ் (44) ஆகியோர் சிறப்பாக விளையா ஸ்கோரை உயர்த்தினார் .

பின்னர் 204 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 207/5 ரன்கள் எடுத்தது சிறப்பான வெற்றியைப் பெற்றது . கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் (8 சிக்ஸர்கள்) அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

ஐயர் மற்றும் நெஹால் வதேரா இடையே 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ட்ரெண்ட் போல்ட் நெஹால் வதேராவின் கேட்ச் தவறவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி ஜூன் 3 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை நடந்த 18 சீசன்களில் ஒரு ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்த மும்பை இந்தியன்ஸ் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடைந்ததில்லை. நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் இந்த சாதனை உடைக்கப்பட்டுள்ளது

Continue Reading

Sports

ஐ.பி.எல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பு !

Published

on

By

ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ .

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வாய்ப்பு

தேதி மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்படும் மீதமுள்ள போட்டிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – பிசிசிஐ வட்டாரம்.

 

Continue Reading

Sports

ஒரு வழியாக வெற்றிப் பெற்ற சிஎஸ்கே !

Published

on

By

தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து ரஹானே 48 ரன்களும் ரசூல் -38 ரன்களும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அஹமது 4 விக்கெட் எடுத்தார் .

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 60/5 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ப்ரேவிஸ் 52 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே  45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர் முழுவதும் தனது சொதப்பலான ஆட்டத்தினால் ரசிகர்களை வெறுப்பேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி ஆறுதலாக இருந்துள்ளது .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதுபோல் கண்டிப்பாக உணரும். பவர் பிளேயிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ன் ஐந்து விக்கெட்டுகள் இழக்கச் செய்திருந்தாலும், நடு ஓவர்களில்சரியான திட்டம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அவர்கள் பிற போட்டிகளில் விளைவுகளை நம்ப வேண்டியுள்ளது. அதேசமயம், மீதி உள்ள போட்டிகளில் வென்றே ஆகவேண்டிய நிலைக்கு மாறியுள்ளனர்.

Continue Reading

Trending