Connect with us

Entertainment

Comedy TWINS Dhanasekar & Nagaraj EXCLUSIVE INTERVIEW!

Published

on

As much as food is important for human survival, laughter is seen as very important for human survival. It is said that a man without laughter is like a prisoner, laughter is the cure for many diseases. A man who laughs is a man who makes him laugh. Many of these great people are giving the medicine of laughter to the people through the cinema industry. In that order, who is going to mix on the small screen by mixing in the show and thereby introducing themselves to the people and making people laugh on the Periyat screen and on the internet, the comedy twins Dhanasekhar and Nagaraj are entering the field.
Both Dhanasekhar and Nagaraj have been friends for many years, Nagaraj came with Dhanasekhar to participate in the show Shalka Govatu Yaaru and Nagaraj also came to the auditions and attracted everyone’s attention and proved their skills in their first shows and won the runner up title. Dhanasekhar is skilled in dubbing the film. The talent of the duo, who are voiced by various artists, was well received by the people. This alliance has brought many victories to their credit. Currently, both of them have joined the YouTube platform as Mr.L.Board. Here you can find the answer given by both of them.

How did you get the chance to enter the small space?

Dhanasekhar : My friend and I used to do mimicry on many platforms in the beginning. Nagaraj and I had come to know that there was an audition for the show “Vijaya Shala Otu Yaru”. Sivakarthikeyan had also attended the audition. We did the mimicry and two days later the news came that Nagaraj and I got selected. Both of them participated in the show “Who will mix” in which Sivakarthikeyan became the winner and we both became the runners-up. Later we won 3.5 Lakhs in the Shalaka Govatu Yaru Champion show.

Mr.L.Board channel creation story?

Dhanasekhar: We decided to start this channel in 2019, but due to Corona there was a little delay and we started in 2020. We write a lot of scripts and deliver shows. There were opportunities to write scripts from many people, but Mr.L.Board channel was created with the idea of ​​creating a channel for us and conveying the idea that we wanted to convey to the people without any obstacles.

Cinematic experience?

Dhanasekhar: My first film was Annanku J, co-directed by director Vetimaaran and starring Attak Kaththi Dinesh as the lead. Thangadurai and I went to write the script for this film, director Rajkumar asked me to play the role of a police officer in his film and Thangadurai and I acted together. After watching the show of the second film Shula Vatu Yaar Champion, actor Simbu sir called to his house and praised him and said that he told Santhanam about you. The next day he got a call from Santhanam’s office and gave Dil an opportunity to act in the 2nd side of Thuttu. This is because of Simbu sir, I have to thank him for Trisha Illina Nayanthara Part 2 and Prabhu Deva starrer Bajiheera.

First Stage Show? Experience?

Dhanasekhar: Everyone’s first experience is at a place like a wedding ceremony or a temple festival. My first Anumbhavam college was when I was studying mechanical engineering in Panimalar College. It was the encouragement of my friends in college that helped me grow.

Most memorable compliment you’ve received?

Dhanasekhar: Nagaraj and I won 3.5 lakh rupees in the 2007 show “Shalkap Govatu Yaru”. Actor Bhagyaraj sir attended the program as a special guest and praised us on the stage and gave us a gift which is an unforgettable event in our life. Similarly, I consider it a great privilege that actor Simbu sir invited me to his home and gave me a film opportunity.

Unforgettable moment?

Nagaraj: The unforgettable moment when me, Dhanasekhar, Lawrence and Srikanth won the champion title in the show Who’s going to mix it up was a lot of hard work, because many teams were strong. Winning among the likes of Sivakarthikeyan, Arun Kamaraj, Vadivel Balaji, Aadhavan is a joyous and unforgettable experience.

What is the reason for your combination work?

Nagaraj: If both of us write a script, we will not agree until it is good. We never hesitated to say no to whoever wrote it, we have no ego, we will talk and fix anything.

Who received praise for your stellar voice?

Nagaraj: An appreciation ceremony was held in Pondicherry on behalf of actor Bhagyaraj sir’s fan base, in which Pandiyarajan sir took me. He took me through this

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

ராபின் வுட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை! சாக்ஷி அகர்வால்!

Published

on

By

உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி?

என்னுடைய இளம் வயது பள்ளிப் பருவத்தில் நான் ஐஏஸ் ஆக விருப்பப்பட்டேன்,ஆனால் ஐ டி ததுரையின் அசுர வளர்ச்சியால் என் மனம் மாறியது பின்னர் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்தேன். எனது வாழ்க்கையில் மாடலிங் மற்றும் சினிமா இணையும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இன்று நிஜமாகி இருக்கிறது தற்போது தமிழ்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். இந்த வாழ்கை எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல அனுபவம்.

மார்க்கெட்டிங் துறையில் இருந்து சினிமாவுக்கு மாறியது எப்படி ?

எம்.பி.ஏ படிக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது இன்போசிஸ்யில் நடந்த பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டேன் அதன் பின்னர் கொச்சியில் நடைபெற்ற மற்றோரு பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது பின்னர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மார்க்கெட்டிங் வேலையை விட்டு விட்டு இதில் இறங்கி விட்டேன்.

முதல் படம் முதல் அனுபவம் ?

முதன் முதலாக நடித்தப் படம் யுகன் இது தமிழ் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. காரணம் சினிமாவைப் பற்றி ஒன்னும் தெரியாத நிலையில் கேமரா அனுப்பவும் இல்லாமல் நடித்த முதல் படம்எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது சிறந்த அனுபவத்தை தந்தது.

நீங்கள் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளைக்கு என்ன குவாலிட்டி இருக்கணும் ?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். நல்ல நண்பனாகவும், இருவரும் புரிந்து நடக்கும் மனிதராகவும் இருந்தாலே வாழ்கை எளிதாகயும்,அழகாகவும் அமையும்.

என்ன மாதிரியான கேரக்டர் பண்ணனும்னு ஆசை ?

உண்மையை சொல்லனும்னா இந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் என்று ஆசையெல்லாம் இல்லை. அனைத்து வகையான காதாபாத்திரதில் நடிக்க வேண்டும், முக்கியமாக கிராமப்புற கதாபாத்திரம், பக்கா திருநெல்வேலி பொண்ணு கேரக்டர் அதேசமயம் அதிரடி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இதனை தவிர்த்து பெண் ராபின்வுட் கேரக்டர் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுடைய பிட்னெஸ் ரகசியம் (டையேட் பிளான் ) என்ன ?

எனக்கு எப்பொழுதும் பிட் ஆக இருப்பது பிடிக்கும், டயட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவள் நான். என்னைப் பொறுத் தவரையில் உடலுக்கான பிட்னெஸ் தாண்டி நம் மன நிம்மதிக்கான பிட்னெஸ் தேவை . ஓவ்வொரு முறையும் உடல்பயிற்சி செய்யும் பொழுது எனது மனம் நிம்மதியும் என்மேல் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் தொடமாட்டேன். அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வேன், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் நன்றாக சாப்பிடுவேன் அதுக்கு ஏற்றாப்போல் உடல்பயிற்சி செய்வேன் இதுதான் எனது பிட்னெஸ் ரகசியம் .

யாருடைய ரியல் கதாபாத்திரத்தில்நடிக்க ஆசை?

நிஜ கதாபத்திரம்னா… பெண்களை மையப்படுத்தி, பெண்களின் வீரத்தைப் போற்றும் விதமாக இருக்கும் பாத்திரம், உதாரணமாக வேலுநாச்சியார் போன்ற பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை.

லைப்ல மறக்க முடியாத அனுபவங்கள் ?

காலா படத்தில் சுமார் 55 நாட்கள் நடித்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. ரஜினி சார், ரஞ்சித் சார் மற்றும் பட குழுவினர்களுடன் இருந்த தருணம் மறக்க இயலாதது .

ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவம் ?

என்னுடைய இளம் வயது கேரியரில் உலக சூப்பர் ஸ்டார்களான ரஜினி சார், மற்றும் அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே மிகப்பெரிய அனுபவசாலிகள் இவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் ஒழுக்கம், வேலையில் ஆர்வம், வேலை மீது இருக்கும் பற்று இதை அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்கள், மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும் கீழே இருப்பவர்களை மதிக்க தெரிந்தவர்கள். இவர்களுடன் நடித்த அனுபவம் என வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

பிக் பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் ?

பிக் பாஸ் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதற்கு பிக் பாஸ்க்கு நன்றி சொல்லவேண்டும். அது மட்டும் இன்றி நிறைய ரசிகர்களைப் பெற உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் என்னைப் பற்றி அறிய வழி செய்தது. பிக் பாஸ் பொருத்தவரையில் எனக்கு’ கிடைத்த அனுபவம், எல்லோரும் நம்மை விரும்ப மாட்டார்கள் எல்லோரும் நம்மை வெறுக்க மாட்டார்கள் , நாம் செய்யும் விஷயம் சிலருக்கு சரியா இருக்கும், சிலருக்கு தப்பாக இருக்கும், இந்த உலகத்தில் எது சரி எது தப்புனு யாருக்கும் தெரியாது, ஓவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும். செலிபிரிட்டியாக வளரும் பொழுது பல நிறை குறைகளைதாண்டிதான் வர வேண்டும் என்பதயும் கற்றுக் கொடுத்தது இந்த பிக் பாஸ்.

 

 

Continue Reading

Entertainment

80களில் காதல் காவியமான டி ஆர் பாடல்கள்! மாஸ் ஹிட் அடித்த

Published

on

By

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.

1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.

தட்டி தூக்கிய டிஆர் :

இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.

இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.

சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .

வெற்றி நாயகன் :

சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.

80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.

இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 

Continue Reading

Entertainment

ரீஎன்ட்ரியில் மாஸ் காட்டிய கில்லி!

Published

on

By

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று விஜய் அவர்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம். விஜய்யுடன் திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் கில்லி. இந்த படம் சுமார 20 வருடம் கழித்து ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் திரைக்கு வந்தது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு விஜய்க்கு முதலில் வெளிவரும் படமாக வெளிவந்த கில்லி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது.

கில்லி திரைப்படம் மீண்டும் முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்திய மறுவெளியீடுகளின் தெலுங்கு வெற்றிப்படங்களை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரி ரிலீஸ் ஆனது என்றாலும் விஜயின் புதியப் படத்துக்கு எந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே அளவு கொண்டாட்டம் கில்லி ரீ-ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காண முடிந்தது. திரைஅரகில் அப்படிப்போடு பாடலுக்கு திறை அரங்கில் ரசிகர்கள் அனைவரும் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.

ரீ ரிலீஸிலும் இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

Trending