Connect with us

Tech

ELGi opens New Manufacturing Facility in Coimbatore!

Published

on

ELGI Sauer Compressors Ltd, the joint venture between Elgi Equipments Ltd and the German-based Sauer Compressors Group, expanded operations by opening a new manufacturing facility in Kallappalayam, Coimbatore, Tamil Nadu. 

With an investment of approximately INR 400 million, the 50,000 sq. ft. facility will begin manufacturing state-of-the-art high-pressure compressors, pressure-reducing stations, and portable breathing air compressors for the industrial, commercial shipping, naval and offshore markets in India.

A press release said that this facility will also house an Engineering Support Centre, which will provide engineering support to the Sauer Compressors Group worldwide for new product development and prototype testing.Speaking at the inauguration, Jairam Varadaraj, Managing Director, Elgi Equipments Limited, said, “The ELGi Sauer joint venture, established in 2008, brought advanced technology, a wider range of products, increased availability due to indigenization and better product support to the Indian Navy, marine and related special applications. Over 14 years of partnership, we have created a niche identity in the high-pressure market in India and neighboring countries.”

“Today, ELGI Sauer Compressors has strong local market know-how, indigenization prospects to be more competitive, and opportunities to deliver customized solutions. Looking ahead, agile operations, increased capacity, and local-for-local supply will be essential to supporting our customers, and with this world-class facility ELGI Sauer is well positioned to serve new markets and achieve long-term business goals.”

“They have become an indispensable part of the global Sauer Compressors Company Group, and they strengthen our technical competencies. We thank our partner ELGI for almost 15 years of very friendly and reliable cooperation. We are convinced that this expansion will be the beginning of the next chapter of our success story.”

“This is an important milestone in our journey towards market leadership and sustained business growth for ELGI Sauer Compressors in India. This factory with expanded manufacturing capacity will help us further consolidate the engineering, indigenization, and product support capabilities of both constituent entities and create a strong aftermarket network,” said Satish Kini, Chief Executive Officer, ELGI Sauer Compressors Limited.

Tech

மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் பியூர் நிறுவனம்

Published

on

By

ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்’ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

‘பியூர்-பவர்’ கமர்சியல் எனும் தயாரிப்பு மூலம் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அமைப்புகள் எந்தவித இடைநிற்றலும் இன்றி இயங்கும். மேலும் இதனால் தொழில்நிறுவனங்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை நிலைப்படுத்தவும், ‘பீக் லோட்’ கட்டணங்களையும் பெருமளவு குறைத்திடவும் முடியும்.

‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அதனால் மின்சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த கட்டமைப்பில் 5ம் தலைமுறை மின் அமைப்புகள் உள்ளன. இதில் பி.சி.எம். (Nano Phase Change Material) எனும் தனித்துவம் கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த தயாரிப்பில் வெப்பநிலை மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்த தயாரிப்புகளின் செயல்பாடு மற்றும் வாழ்நாள் பல காலத்துக்கு நீடிக்கும்.

குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல், 100% தடையிலாதுஇயங்குவதை உறுதி செய்ய, இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும். மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாகவே அறிந்துகொள்ள முடியும்.

கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இனைந்து அறிமுகம் செய்துவைத்தார்.

இதுகுறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “இந்திய தொழில்நிறுவனங்களின் மின்சாரம் தொடர்பான முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பியூர் நிறுவனத்தின் குறிக்கோள். அதை மனதில் வைத்தே பியூர் பவர்-ரை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல்பாட்டு செலவு குறையும் படி உருவாக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.

‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு அதன் சேமிப்பு அளவை 25 KVA முதல் 100 KVA வரை அதிகரிக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ஒரு தொழில்நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனெரேட்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துடனும் தானாகவே இனைந்து செயல்படக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அமைப்பாக இது இருப்பதால் ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு அவசியமான, மின்சாரம் அதிகம் இழுக்கக்கூடிய கருவிகளை தொடர்ந்து இயக்கிக்கொள்ள முடியும், மற்றொரு பக்கம் மின்சாரத்தை சேமித்துக்கொண்டு இருக்கவும் முடியும்.’பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்கள் ‘பீக் ஹவர்’ இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேகரித்து வைத்து கொண்டு, பீக் ஹவர் நேரங்களில் சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு மிச்சமாகும்.

டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “நமது நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மாற்றங்களையும், அந்த நிறுவங்களுக்கு கணிசமான, மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என பாராட்டிப் பேசினார்.

பியூர் நிறுவனம் தொழில்நிறுவங்களுக்கு மட்டுமில்லாது இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை பியூர் பவர் ஹோம் என்ற பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Tech

87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

Published

on

By

2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் ஸ்டீரிங்க் இணைப்பில், பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் விற்பனையகமே தொடர்புகொண்டு கார்களை திரும்ப பெற்று, ஆராய்ந்து பழுதாக வாய்ப்புள்ள பாகத்தை எவ்வித கட்டணமின் மாற்றித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாருதி 2019 இல் எஸ்-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது. லிட்டருக்கு 25.3 கிமீ வரை எரிபொருள் செயல்திறனை வழங்கும் ஐடில்-ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 1-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2022 ஆம் ஆண்டில், மாருதி Eeco MPV இன் புதிய பதிப்பை ரூ. 5.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. புதிய Eeco 5 இருக்கை கட்டமைப்பு,

7 இருக்கைகள் இதில் அடங்கும் .

Continue Reading

Tech

ஆண்ட்ராய்ட்யில் சாட் ஜிபிடி ஆப் அறிமுகம் !

Published

on

By

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது இது மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட மிகவும் துல்லிய தன்மையுடன் தகவல்களை அளிப்பதுதான் மமுக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவை மக்கள் அனைவரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இணையத்தளம் மூலம் பயன்படுத்தி வந்த சாட் ஜிபிடியை தற்போது ஆண்ட்ராய்ட் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டுக்கான ChatGPT ஆப் இப்போது இந்தியா ,அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பிரேசில் கிடைக்கிறது. பிற நாடுகளுக்கு விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

Trending