Connect with us

செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து: விடியற்காலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Published

on


கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலில் முதலில் விபத்துக்குள்ளானது. ; மாற்று வழித்தடத்தில் 38 ரயில்கள் இயக்கம்!

ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு தமிழக அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

• ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து, கொல்கத்தாவில் இருந்து 101 பயணிகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டனர்

• 17 பேர் பயணம் செய்யவில்லை, 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

14 பேர் காயமடைந்துள்ளனர்- 09 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

கோவா மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா ரத்து

பிரதமர் மோடி இன்று காலை ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு. இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன

வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து!

இந்தியாவை புரட்டிப்போட்ட ஒடிசா ரயில் விபத்து! ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து 1999 முதல் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1999 ஆம் ஆண்டு, அசாமின் கைசல் பகுதியில் 2,500 பேருடன் சென்ற 2 ரயில்கள் மோதிக்கொண்டன. விபத்தில் 285 பயணிகள் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்! ரயில் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார் - தமிழக அரசு ஹெல்ப்லைன் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு044 2859 3990, 94458 69843

Tech

மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் பியூர் நிறுவனம்

Published

on

By

ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்’ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

‘பியூர்-பவர்’ கமர்சியல் எனும் தயாரிப்பு மூலம் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அமைப்புகள் எந்தவித இடைநிற்றலும் இன்றி இயங்கும். மேலும் இதனால் தொழில்நிறுவனங்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை நிலைப்படுத்தவும், ‘பீக் லோட்’ கட்டணங்களையும் பெருமளவு குறைத்திடவும் முடியும்.

‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அதனால் மின்சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த கட்டமைப்பில் 5ம் தலைமுறை மின் அமைப்புகள் உள்ளன. இதில் பி.சி.எம். (Nano Phase Change Material) எனும் தனித்துவம் கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த தயாரிப்பில் வெப்பநிலை மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்த தயாரிப்புகளின் செயல்பாடு மற்றும் வாழ்நாள் பல காலத்துக்கு நீடிக்கும்.

குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல், 100% தடையிலாதுஇயங்குவதை உறுதி செய்ய, இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும். மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாகவே அறிந்துகொள்ள முடியும்.

கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இனைந்து அறிமுகம் செய்துவைத்தார்.

இதுகுறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “இந்திய தொழில்நிறுவனங்களின் மின்சாரம் தொடர்பான முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பியூர் நிறுவனத்தின் குறிக்கோள். அதை மனதில் வைத்தே பியூர் பவர்-ரை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல்பாட்டு செலவு குறையும் படி உருவாக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.

‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு அதன் சேமிப்பு அளவை 25 KVA முதல் 100 KVA வரை அதிகரிக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ஒரு தொழில்நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனெரேட்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துடனும் தானாகவே இனைந்து செயல்படக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அமைப்பாக இது இருப்பதால் ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு அவசியமான, மின்சாரம் அதிகம் இழுக்கக்கூடிய கருவிகளை தொடர்ந்து இயக்கிக்கொள்ள முடியும், மற்றொரு பக்கம் மின்சாரத்தை சேமித்துக்கொண்டு இருக்கவும் முடியும்.’பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்கள் ‘பீக் ஹவர்’ இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேகரித்து வைத்து கொண்டு, பீக் ஹவர் நேரங்களில் சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு மிச்சமாகும்.

டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “நமது நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மாற்றங்களையும், அந்த நிறுவங்களுக்கு கணிசமான, மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என பாராட்டிப் பேசினார்.

பியூர் நிறுவனம் தொழில்நிறுவங்களுக்கு மட்டுமில்லாது இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை பியூர் பவர் ஹோம் என்ற பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

செய்திகள்

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Published

on

By

மே மாதம் 2ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதிமுகபாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின் நடக்கும் செயற்குழு கூட்டம் என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

Continue Reading

செய்திகள்

ஊழல்’ தான் – :,கூட்டணி அறிவிப்பு – கூட்டணி இடிபோல் இறங்கியுள்ளது!

Published

on

By

நேற்று அமித்ஷா சென்னை வந்து இஅதிமுயுடன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு சென்றார்.இந்த கூட்டணி குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திமு கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளனர் , ஆளாவர் கூறியிருந்தது

“அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

இதற்கு பதில் கூறும் விதமாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறியது “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடிபோல் வந்து இறங்கியுள்ளது!

மக்களின் பேராதரவோடு அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி வாகை சூடும்” எதிர்கட்சி தலைவர் – எடப்பாடி பழனிசாமி 

Continue Reading

Trending