Connect with us

செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து: விடியற்காலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Published

on


கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலில் முதலில் விபத்துக்குள்ளானது. ; மாற்று வழித்தடத்தில் 38 ரயில்கள் இயக்கம்!

ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு தமிழக அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

• ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து, கொல்கத்தாவில் இருந்து 101 பயணிகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டனர்

• 17 பேர் பயணம் செய்யவில்லை, 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

14 பேர் காயமடைந்துள்ளனர்- 09 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

கோவா மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா ரத்து

பிரதமர் மோடி இன்று காலை ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு. இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன

வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து!

இந்தியாவை புரட்டிப்போட்ட ஒடிசா ரயில் விபத்து! ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து 1999 முதல் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1999 ஆம் ஆண்டு, அசாமின் கைசல் பகுதியில் 2,500 பேருடன் சென்ற 2 ரயில்கள் மோதிக்கொண்டன. விபத்தில் 285 பயணிகள் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்! ரயில் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார் - தமிழக அரசு ஹெல்ப்லைன் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு044 2859 3990, 94458 69843

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்!

Published

on

By

முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க உள்ளது . இதில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. .ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

இதென்படி மக்கள் நீதி மயமத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளது உறுதி ஆகியுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

செய்திகள்

+2ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

Published

on

By

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்

93.76%  2022

94.03%.  2023

94.56%  2024

95.03%    2025

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்

தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்

மாவட்ட வாரியாக:

அரியலூர்: 98.82

ஈரோடு: 97.98

திருப்பூர்: 97.53

கோவை: 97.48

கன்னியாகுமரி: 97.01″

கணினி அறிவியலில் அதிகம் பேர் சென்டம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 9,536 பேர் 100 மதிப்பெண்கள்.

கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர்

வேதியியல் – 3,181 பேர்

கணிதம் – 3,022 பேர்

வணிகவியல் – 1,624 பேர்

கணக்கு பதிவியல் – 1,240 பேர்

Continue Reading

Trending