Connect with us

Entertainment

சூர்யா தான் என்னுடைய பேவரிட்! – ஆதிரா ராஜ்

Published

on

ஆதிரா ராஜ் பற்றி ?

என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.

சினிமா ஆர்வம் எப்போது வந்தது?

சின்ன வயசுல  நிறைய ட்ராமா பண்ணீருக்கேன், அப்புறம் ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன் அப்பொழுது எல்லாம் சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை, அந்த எண்ணமும் அப்பொழுது வரவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு குறும்படம் நடக்க வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்த பிறகு தான் சினிமா மேல் ஆசை வந்தது. அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க முடிவுசெய்தேன்.

பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது ?

மலையாள குறும்படம் நடித்த பிறகு கஸ்டீம் இயக்குனர் ஒருவர் என்னுடைய புகைப் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது பின்னர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹிப் ஹாப் தமிழா உடன் நடித்த அனுபவம் ?

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு சிறந்த கலைஞர், நடிப்பில் அதிக ஆர்வம் உடையவர். அவருடன் நடிக்கும் பொழுது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நடிப்பை பற்றி எனக்குள் இருந்த சந்தேகங்களை போக்கியவர். நல்ல மனிதர்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? ஏன் ?

நடிகர் சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை, அவருடைய படம் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன்.

யார்கூட எல்லாம் நடிக்கணும் என்று லிஸ்ட் இருக்கா?

லிஸ்ட் எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு எல்லோருடையும் நடிக்கணும் என்று ஆசை. சிறந்த நடிகை என பெயர் எடுக்கணும் இது நிறைவேற பாடுபடுவேன்.

சினிமாவிற்குள் வர, உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் ?

என்னுடைய தாத்தா தான் எனக்கு மிகப்பெரிய   இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு நடிகர். பல மலையாள திரைப்படம் மற்றும்    நாடகத்தில் நடித்துள்ளார். அவரால்    தான் எனக்கு சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. அவருடன் நிறைய ட்ராமா நடிச்சிருக்கேன்.  பெரிய திரையில் என்னைப்  பார்க்க வேண்டும் ஆசை என பட்டார். இன்று அவரது      ஆசை நிறைவேறியது ஆனால் அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் எது ?

சினிமா ஆசை உள்ள எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் ஒருமுறையாவது பெரியத்திரையில் நாம் வந்துவிட வேண்டும் என்று எனக்கும் அந்த ஆசை இருந்தது அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாயிற்று. என்னை  ஒரு கதாநாயகியாக பெரியத் திரையில் பார்த்தது தான் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.

உங்கள் குடும்பத்தை பற்றி?

நான், அப்பா ராஜன், அம்மா பிரீத்தி ராஜன , தம்பி அமல் ராஜ் எனக்கு என்றும் உறுதுணையாக இருப்பது இந்த மூன்று பேர்கள் தான்.

முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது விளக்கமாக சொல்லுங்க?

முதல் கேமரா அனுபவம் ரொம்ப பயமாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன் பயத்தை போக்க, குறும் படம் நடிக்கும் பொழுது இரண்டு அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள் அதனால் பயம் தெரியவில்லை. ஆனால் சினிமா அப்படி கிடையாது, கோ ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், அசிஸ்ட்டேன்ட டைரக்டர், லைட் மேன், ஹெல்பர் என பல பேர் இருப்பாங்க ரொம்ப பயமா இருக்கும். படம் நடித்து முடித்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

வசூல் சாதனையில் அஜித்தின் குட் பேட் அக்லி

Published

on

By

ஜித் குமார் நடிப்பில்,மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அஜித்தின் நடிப்பை பாராட்டி கோலாகலம் படுத்தி வருகின்றனர் . இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்த்துள்ளதால் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

 குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கம் நிரம்பி வழிகிறது, தொடர் விடுமுறை காரணமாக மேலும் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் வசூல் சாதனையாக 30 கோடி ரூபாய்யை அள்ளி ரெகார்ட் செய்துள்ளது ஜித்தின் குட் பேட் அக்லி படம்.

Continue Reading

Entertainment

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி பிரசாந்த் கூட்டணி!

Published

on

By

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரசாந்த், அதிரடி இயக்குனர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஹரியுடன் இணையும் இரண்டாவது  படமாகும். ஏற்கனவே தமிழ் என்ற படத்தில் இவ்விரு கூட்டணி இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது, சுமார் ​​24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இது செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகி உள்ளது

பிறந்தநாள் நாளில் முக்கிய அறிவிப்பு ! ‘கடைசியா அந்தகன்’ படத்தில் நடித்த பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களிடமிருந்து பல ஸ்கிரிப்ட்களை கேட்டு ஆராய்ந்து வந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது, ​​இந்த வரவிருக்கும் படம் அவரது 55 வது படத்தின் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கிறார் பிரசாந்த் ஒரு பிரபல இயக்குனருடன் மிக பெரிய மறுபிரவேசத்தைக் காண களமிறங்கியிருக்கிறார் நடிகர் பிரசாந்த் . தயாரிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார் .இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது , மற்ற முன்னணி மற்றும் துணை வேடங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

ரத்தினம்’ படத்திற்குப் பிறகு ! விஷாலை வைத்து ‘ரத்தினம்’ படத்தை இயக்கிய ஹரி, இடைவெளியில் பல்வேறு நடிகர்களுடன் கதை காண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அவர் இப்போது பிரசாந்தை கதையின் நாயகனாக இறுதி செய்துள்ளார். சூரியா, விக்ரம், சிம்பு, அருண் விஜய், விஷால் என பல ஹீரோக்களை வைத்து மாஸ் படம் கொடுத்த ஹரி டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து புதிய கதை கலத்துடன் காலத்தில் இறங்கியுள்ளார்.

Continue Reading

Entertainment

வேட்டையன் – விமர்சனம் !

Published

on

By

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ளது வேட்டையன் திரைப்படம்.

ஜெயிலர் போன்ற மாஸ் படத்தை கொடுத்த ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றப்போல் சிம்பிள் மாஸாக நடித்துள்ளார்.

ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள TJ ஞானவேல் அவரது அதே பணியில் முக்கிய கருத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பராக படமாக்கியுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களுக்குத்த தேவையான மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள், என கமர்சியலாகவும் டச் கொடுத்து சபாஷ் வாங்குகிறார்.

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் ரவுடிகளை சுட்டுத்தள்ளிக்கிறார் . குற்றத்துக்கு என்கவுண்டர் தான் தீர்வா? என கேள்வி எழ ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது அது பெரும் பிரச்சனை ஆக மாறுகிறது . அதனை கண்டுபிடித்து எதிரியை என்கவுண்டர் செய்கிறாரா? அல்லது சட்டப்படி தண்டனை வாங்கித்தருகிறாரா? என்பது தான் மீதி கதை. என்கவுண்டர் பற்றியும் நீட் தேர்வை வைத்து நடக்கும் மோசடிகளை வைத்து மாஸாக படத்தை கொடுத்திருக்கிறார் TJ ஞானவேல்.

இந்த படத்தின் ரஜினிகாந்த்க்கு அடுத்தது அதிகம் பேசப்படும் நபராக பஹத் பாசில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் ரஜினியுடன் வலம் வருகிறார் . அமிதாப் பச்சன் ,மாஞ்சு வாரீர், துஷார விஜயன், ராணா, ரோகினி, அபிராமி ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்.

அனிருத்தின் இசை ஜெயிலர் படத்துக்கு கை கொடுத்ததுபோல் இந்த படத்திலும் கை கொடுத்துள்ளது. மனசிலாயோ பாடல் ரசிகர்களை ஆட வைத்துள்ளது.

காமெடிக்கு இடமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது இருந்தாலும் பஹத் பாசில் நம்மை அங்கங்கே சிரிக்க வைக்கிறார் . படம் ஒரு சிறிய திரில்லர் திரைப்பட பாணியில் நம்மை நகர்த்தி செல்கிறது .

ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படமாக வடிவமைத்துள்ளார்  TJ ஞானவேல்.

E-Behind Movie Rating !

Continue Reading

Trending