Connect with us

இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3- பிரதமர் மோடி வாழ்த்து

Published

on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது .

ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சந்திரனை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது விரும்பிய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

3 அடுக்குகள் திட்டமிட்டபடி பிரிந்தன.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. அனைத்து முதற்கட்ட படிநிலைகளையும் வெற்றிகரமாக கடந்து விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் கடந்து ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என தகவல்.சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

பிரதமர் மோடி வாழ்த்து :

“இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்; சந்திரயான்-3 என்பது நமது 3வது சந்திரப் பயணம்;

சந்திரயான்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்” – பிரதமர் நரேந்திரமோடி ட்வீட்

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தலைவர்கள் பாராட்டு !

Published

on

By

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் இந்திய ராணுவதுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ராணுவத்கை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழகம் இராணுவத்தின் பக்கம் நிற்பதாக கூறியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Continue Reading

இந்தியா

பிரதமர் மோடி நடவடிக்கைகளுக்கும் அனைவரும் உறுதுணையாக இருப்போம்!

Published

on

By

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் – தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

OPERATION SINDOOR எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் உட்கட்டமைப்பை சிதைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

ஜெய்ஹிந்த் என xக்ஸ் தளத்தில் மு பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்

Continue Reading

இந்தியா

பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்! மத்திய அரசு அதிரடி

Published

on

By

ஹல்காம் தீவிரவாத தாக்குதல் : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் பலியானதாக அச்சம்.

விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல். படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி. இந்த தாக்குதலை அடுத்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது  கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு.இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது. பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.

சார்க் விசா ஒப்பந்த‌த்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை என – மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியது டெல்லி காவல்துறை; காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசு நடவடிக்கை.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, ஏப்ரல் 27ம் தேதி வரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவின் முதன்மை கல்வி அதிகாரி.

இதேபோல் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.

 

 

Continue Reading

Trending