Connect with us

கோயம்பத்தூர்

மனதை அலைபாய செய்யும் மொபைல் , சீரியல், சினிமாகளில் மாணவர்கள் மூழ்கிவிடக்கூடாது – தாமு !

Published

on

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அவர்களின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கு புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டியாக இருந்து வருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் நடிகர் தாமு அவர்கள் . இதுவரை, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில், தனது அற்புதமான சிந்திக்கும் உரையை வழங்கி ,ஆழ்மன பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக கோவை அவிநாசி, அ.குரும்பபாளையம், வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி சார்பில், கொங்கு கலையரங்கில் , ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடம் தனது உரையை வழங்கினார் நடிகர் தாமு .

நடிகர் தாமு பேசியது :

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், மதிப்பெண் குறைவதற்கும், தேர்வின் மீது பயம் வருவதற்கும் காரணம், மாணவ, மாணவியரின் இயலாமையோ, அறியாமையோ அல்ல; நேரத்தை வீணடிக்க செய்து, மனதை அலைபாய செய்யும் மொபைல் போன்கள், ‘டிவி’ சீரியல் கள், சினிமாக்களில் அவர்கள் மூழ்கிவிடுவது தான்.

அவற்றால் ஏற்படும் மனச்சிதைவுக்கு மருந்து கிடையாது; மாறாக, மன மாற்றமே முக்கியம். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உள்வாங்கி, ஆழ்மனதில் நிறுத்திக் கொள்வதால், வெற்றி சாத்தியமாகும். வலைதளங்களில் மனதை சிறைபடுத்தி, அடிமைப்பட்டு கிடக்கும் நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

இளைஞர்களின் ஆற்றல் அதிகமுள்ள நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில் 53.8 சதவீதம், அமெரிக்காவில், 58.8, சீனா, 54.9, ரஷ்யா, 59.1 சதவீதம் என்ற அளவில், இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. அதே நேரம், இந்தியாவில், 64.5 சதவீதம் இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலில், மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

மொபைல் போன்களில் விதம், விதமான செயலிகள் வழியாக, மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் மனதை பாழ்படுத்தும் செயல் என்பது, வெளிநாட்டு சதி என்பதை உணர வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு துவக்கம்!

Published

on

By

சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக  வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் – உயர்கல்வி துறை K. கோபால் வெள்ளிக்கிழமை கோவையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு – தெற்கு பகுதியின் (CII SOUTHERN REGION ) சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024ல் (CII EDUTECH EXPO 2024) கூறினார்.

 

சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி (CII EDUTECH EXPO) மற்றும் அதன் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு இன்று கோவையில் நடைபெற்றது.இந்த மாநாடு நவம்பர் 15-16 கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.

 

இதன் துவக்க நிகழ்வில் K. கோபால்,   தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – கலந்து கொண்டு, சி.ஐ.ஐ.  மற்றும்  கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு  தயாரித்த உயர் கல்வி குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று,  உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

 

முன்னதாக சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதியின் தலைவர் R. நந்தினி, சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ.யின்  தெற்கு பகுதி முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர் நாராயணன் ராமசாமி, மற்றும் சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  உரையாற்றினர்.

 

 K. கோபால் அவர்கள் பேசுகையில், நிகழ்காலத்தில் உயர் கல்வி பாடத்துடன் தற்போது வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் அவசிய திறன்களை ஒன்றிணைக்க அரசு ‘விளைவுகளை மையப்படுத்தி கல்வி கற்பித்தல்’ எனும் முறையை பின்பற்றுகிறது என குறிப்பிட்டார்.

 

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்துறையுடன் கல்வி துறை கைகோர்த்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் போதே தொழிற்பயிற்சி (INTERNSHIPS), தொழில்துறை தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவது அவர்களை இப்போதே எதிர்காலத்திற்கு தயார் செய்வதுடன், நமது பொருளாதார வளர்ச்சியை மேம்பட செய்யவும் வழிவகுக்க கூடிய ஒன்றாக அமையும் என்றார்.

 

CII தெற்கு பகுதியின் தலைவரும் இந்த சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சியின் தலைவருமான ஆர்.நந்தினி தனது வரவேற்பு உரையில்,  உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திறமைமிகு பணியாளர்களையும், தலைவர்களையும் கோவையில் உள்ள நன்மதிப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளது என கூறினார். இங்கு நிலவும் சிறந்த கல்வி கட்டமைப்பு, பொறியியலும், தொழில்துறையும் ஒன்று சேர்ந்த செழிக்க வைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக கோவை திகழ ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

 

காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர் பேசுகையில், தொழில்த்துறைக்கு தயாரான, தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையே உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம் என்றார்.

 

இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில்  பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் தமிழகம் முனைப்புடன் செயல்படும்

Published

on

By

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பைத் தொடங்கவும், தனியார் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையைத் தொடங்கவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை (12.11.2024) அன்று கோவை வந்திருந்தார்.

அவர் ரூ.13 கோடி மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் சிஸ்டத்தை கோவை ஜிஹெச்சில் டாக்டர் நிர்மலா, சிஎம்சிஎச் டீன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சிலர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் இது இரண்டாவது எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பு இதுவாகும்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், 1-2 மாதங்களில், அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என்றார்.


மேலும்தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் வலுவான நடவடிக்கைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கொண்டு வருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஓராண்டுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் இதுவரை 109 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வருமாறு முதல்வர் 4 மாதங்களுக்கு முன்பு துறையிடம் கூறியிருந்தார். ஆரம்ப நிதியாக ரூ. மேலும் வெகுஜன காட்சிகளை நடத்த அரசு 26 கோடி ரூபாய் ஒதுக்கியது.

Continue Reading

Trending