கோவையின் மிகப்பெரிய கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம் இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள் கோயம்புத்தூர் மாரத்தானில் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது . இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும். 2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார். பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம். ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது. இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ....
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்அணைத்து...
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சாலை பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் ‘FICCI சாலை பாதுகாப்பு விருதுகளை’ ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரிவின் கீழ், கோயம்புத்தூர்...
எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய 6 அணிகள் பங்கேற் பங்கேற்கிறது . இந்தியா, கொரியா, மலேசியா,...
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சோ திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக காவாலையா பாடல் மட்டும் ஹுக்கும் பாடல் ரசிகர்கள்...
இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை 90 நாட்களில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்...
டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு...
ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் காயம் காரணமாக 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள பும்ரா இந்திய...