Connect with us

உள்ளூர் செய்திகள்

மருதமலை பாதையில் சிறுத்தை நடமாட்டம்- வைரலாகும் வீடியோ!

Published

on

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி போன்ற விலங்குகள் படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பாக சாலை வழிகள் படிக்கட்டுகள் வழிகள், கோவில் வளாகம் போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்கணிக்கப்படுகிறது .

மேலும் வனத்துறை சார்பாக மலைக்கோவிலுக்கு செல்ல கூடிய பக்தர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இரு சக்கர வாகனங்களும் , 6:30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவரின் காரின் முன்பு முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. வாகனத்தின் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை சிறிது தூரம் ஓடி பின்பு வனப்பதுதிக்குள் சென்று மறைந்து விட்டது. அதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை எங்கெல்லாம் ? மின் தடை!

Published

on

By

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கோவையில் நாளை ஜூன் 13ஆம் தேதி வியாழன் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

மின் தடை ஏற்படும் இடங்கள் :

உக்கடம் துணை மின் நிலையம்:கரும்புகடை பீடர், சி.எம்.சி. பீடர், அரசு மருத்துவமனை பீடர், அன்பு நகர், ஜி.எம்.நகர், சாஃபா கார்டன், ஜே.ஜே. கார்டன், போயெஸ் கார்டன், அற்புதம் நகர், கோட்டை புதூர், என்.எஸ்.கார்டன், சன் கார்டன், லாரி பேட்டை, ஹவுசிங் யூனிட், பொன்விழா நகர், கே.ஜி.லே அவுட், ரோஸ் கார்டன், அல் அமீன் காலனி, பிலால் நகர், அண்ணா நகர், ஜே.கே. கார்டன், ஆஸாத் நகர், பாரத் நகர், சாரமேடு, வள்ளல் நகர், கரும்புகடை, ஆத்துப்பாலம் மயானம், திருச்சி ரோடு – அரசு மருத்துவமனை – கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்.

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே – அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

80 ஆவது ஆண்டில் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை!

Published

on

By

கோவை ,மாவட்டம் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை & படிப்பகம், இன்று 80 ஆவது நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1940களில் நமது கோவை மாநகரம் சினிமா துறையில் கொடிகட்டி பறந்த காலம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் திரு எம் ஜி ராமச்சந்திரன், திரு. கருணாநிதி போன்றவர்கள் இந்த பகுதியிலே இருந்து திரைப்பட பணிகளை மேற்கொண்டனர், அப்பொழுது எம் ஜி ஆர் அவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிக்கும், சிலம்பம், கத்திசண்டை போன்ற சண்டை பயிற்சிகளுக்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட மரபு வழி சித்த மருத்துவர், திரைப்பட சண்டை பயிற்சியாளர் Dr. திரு டி ஆர் லட்சுமி நாராயணன் என்பவர் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தீவிரமான உடற்பயிற்சி மற்றும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தந்தார்.

அப்பொழுது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ மற்றும் பக்க்ஷி ராஜா ஸ்டுடியோவில் தயாரான ராணி, மர்மயோகி போன்ற ஐந்து திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்துக் கொடுத்த திரு லட்சுமி நாராயணன் அவர்களின் பெயரால் கடந்த 1945 இல் தற்போது செயல்பட்டு வரும் இதே இடத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் அனைவரும் கலந்து கொண்டு துவக்கப்பட்டது ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை என்ற அமைப்பு கடந்த 80 ஆண்டுகளாக பல்வேறு உடல் ஆரோக்கியம் , சமுதாயப் ,பணிகள், கல்விப் ,கல்விப் பணிகள், ஆன்மீகப் பணிகள் என்ற பல்வேறு கோணங்களில் தனது சேவையை திறம்பட செய்து இன்று 80 தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது , காலத்தை வென்ற காவியத்தலைவன் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கும் இன்று உள்ள இளைஞர்கள் நமக்கும் உடற்பயிற்சிக்கு ஆசிரியர் ஒருவரே என்பதைதே இதன் பெருமை , இந்த பயிற்சி சாலையில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இந்திய ராணுவத்திலும், தமிழ் திரைப்பட ,துறையிலும், தேசிய மற்றும் மாநில விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு கோவைக்கும், பயிற்சி சாலைக்கும் பல நற்பெயரினை பெற்று தந்துள்ளனர் என்பது பெருமை இவ்வளவு சிறப்பு கொண்ட இந்த தேகப் பயிற்சி சாலையை துவங்கிய முன்னோர்கள், ஆசிரியர்கள்

முன்னாள் நிர்வாகிகள் அனைவராலும் கோவைக்கு பெருமை செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது காலம் தொட்டு வாழும் இந்த புகழ் பல நூற்றாண்டுகள் தாண்டி வீரநடைப் போட வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ராயல் கேர் செவிலியர் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா!

Published

on

By

ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து மணியளவில் கோவை ராமலக்ஷ்மி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் தலைவர், இயக்குனர் டாக்டர் K மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் திரு கிராந்திக்குமார்  அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சூர் ஜூப்ளி மிஷன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏஞ்செலா ஞானதுரை அவர்கள் கௌரவ விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு செவிலியர் பணியை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் .  மேலும், ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி டாக்டர் திலகவதி ராய் அவர்கள் செவிலியர் உறுதிமொழியை முன்மொழிய, மாணவ மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிறைவாக ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் திருமதி சுமிதா நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.

 

 

Continue Reading

Trending