Connect with us

Uncategorized

புதிய சிந்தனைகளுடன் களம் இறங்கிய சுயேட்சை வேட்பாளர்!

Published

on

சுதந்திர இந்தியாவில் சாதாரண குடிமகன் கூட அரசியலில் களம் கண்டு வெற்றிப் பெறலாம் என்பது நம் முன்னோர்கள் நமக்கு தந்த வரலாற்றுப் பாடமாக இன்றும் இருக்கிறது. இதற்கு முன் பல அரசியல் ஆர்வலர்கள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுத் தலைவர்கள் ஆன வரலாறு நாம் அறிந்ததே.

இவர்கள் வரிசையில் தனது தனித்துவமான சிந்தனைகள் மூலம் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்திட நடக்கவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் சுயேட்சையாக களம் கானுகிறார் independent திரைப்பட இயக்குனர் திரு. அருண் காந்த் அவர்கள்.

யார் இந்த அருண் காந்த்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த அருண் காந்த் , பள்ளி படிப்பினை முடித்து விட்டு சுய சிந்தனையுடன் சுயதொழில் மூலம் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடும் , சினிமா மீது உள்ள அதீத ஆசையால், தனது வித்தியாசமான படைப்பாற்றலை மக்களுக்கு வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆபரேஷன் ஜுஜுபி , ரிவிட் போன்ற சமூக அக்கரை படங்களை தனது கனவு படைப்புகளாக வெளிக்கொண்டு வந்தவர் .

தனது இளம் வயதில் இணையதள உதவியுடன் சினிமா, இயக்கம், எடிட்டிங், பாடல் ரெக்கார்டிங், இசை என அனைத்தையும் சுயமாக கற்று, தனது சிந்தனையில் ஒளிந்திருந்த எண்ணங்களை சினிமா மூலம் தட்டி எழுப்பி கோகோ மாகோ, இந்த நிலை மாறும்,ஆபரேஷன் ஜுஜுபி , ரிவிட் ஆகியவற்றை படங்களாக வெளியிட்டார். நல்லது சொன்னால் 40 பேர்கூட திரும்பி பார்க்க மாட்டார்கள் என்ற வார்த்தை கிட்டத்தட்ட இவருக்கும் சொந்தமானவை .அதைப் பற்றயெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கென தனி பானியில் தனது லட்சியப் பயணத்தை அரசியல் மூலம் வெளிப்படுத்த கோவை தொகுதியில் independent candidate ஆக களம் இறங்கியுள்ளார், independent film maker அருண் காந்த்.

இவர் தற்போது வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பார்த்து பலரும் பாராட்டியுளனர் . இதில் பல தொலைநோக்கு சிந்தனைகளும், மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ புதிய வழி முறைகளை கூறியுள்ளார். இவர் சிந்தனையில் தோன்றிய அனைத்தும் (தேர்தல் அறிக்கை) நிஜமானால்???

இதற்கான பதிலை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்!

உங்கள் பார்வைக்காக தேர்தல் அறிக்கை லிங்க் கிழே வழங்கப்பட்டுள்ளது .

https://arunkanth.in/politics 

 

Uncategorized

சிறப்பாக நடைபெற்ற E-BEHIND EXCELLENCE AWARDS 2024 விழா!

Published

on

By

E-Behind என்டேர்டைன்மெண்ட் மற்றும் டெஸ்ட் யுவர் மெட்ரிக்ஸ் இணைந்து நடத்திய E-Behind Excellence Awards 2024, டிசம்பர் 28 அன்று கோவையில் உள்ள கோ – இந்தியா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் ஐந்து பிரிவுகளில் சுமார் பல துறைகளில் சிறப்பு வைத்து சாதனைப் படைத்த 26 பேருக்கு விருதுகளை வழங்கி கொரவிக்கப்பட்டது. இந்த விருதினை கீர்த்திலால்ஸ் குரூப் Head HR திருமதி.சங்கீதா, THE SOUTH INDIA INTERNATIONAL CHAMBER OF COMMERCE திரு .Dr. ஸ்ரீ ஸ்ரீ வம்சதேவன். LIONS CLUB INTERNATIONAL 324-C FORMER CABINET SECRETARY ER.ஆர்.ராமசுப்பிரமணியன்,WiTree Technology Co-Founder திரு .செல்வா முத்து ஆகியோர் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புச் செய்தனர். மேலும் விருதுக்கான நபர்களை சரியாக தேர்வு செய்ய உதவி கரம் புரிந்த ஜூரி திரு.டாக்டர் சரவணகுமார் தேவராஜ், ஷங்கர் IAS அகாடமி, HEAD OF STRATEGY திரு.ரமேஷ் ஆதித்யா, PATHFINDER BUSINESS ANALYSIS GM – HR திரு .செந்தில் குமார், சுகுணா குரூப் MANAGER HR & GA திரு . செந்தில் அருண் பட்டாபிராமன் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.

Nirmala College for Women கல்லூரியின்  முதல்வர் Dr. Mary Fabiola , பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லுரி  முதல்வர்  Dr.முத்துமணி,ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்  Dr.B.சுப்ரமணி, பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்  Dr.Nazeema ,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr. B. L சிவகுமார் , RND Softech Pvt Ltd Manager-HR P. சாந்தி பிரியா , சென்னை மொபைல்ஸ் HR Manager திரு .பழனி, வெர்டிகர்ல்  Associate Director – Training திரு.சேகர் ஸ்ரீராம், Nous infosystems LLP , HR Manager திரு .Ethiraj, Vlogger திரு.விஜய்சக்திவேல், நடிகர் திரு .கெளதம் வினித், ரைசிங் ஸ்டார் .திரு.ராஜீ ஞானவேல், டாக்டர் தவத்திரு ஈஸ்வரன் ஸ்வாமிகள், அறம் அறக்கட்டளை நிறுவுனர் திரு.ரகுராமன், ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி Director-Placement திரு.கார்த்தி அபிநாத்.RVS IMSR, Manager-Corporate Connect திரு.ப. மக்தியேல் எளியசர், கற்பகம் பொறியியல் கல்லூரி Manager Corporate Relations திரு.அசாருதீன், காருண்யா பல்கலைக்கழகம் Manager Corporate Relations திரு.ஹரிபாஸ்கர், டாக்டர்.என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி Head – Training and Placement, திரு.ஆனந்த் பிரபு, Senior Technical Analyst இன்ஃபோசிஸ் லிமிடெட் திருமதி.அனந்தி நாச்சிமுத்து, Manager-HR, HRH நெஸ்ட் திரு.பிரவீன் குமார், HR Manager , Nous Infosystems LLP திரு.Ethiraj, KANINI Software Solution , Talent Acquisition மேனேஜர் திரு.அரவிந்த், கோவை .கோ , Senior Manager Talent Acquisition திரு. ரோஹித் உன்னி, Annalect India Senior Executive People Operations திரு.முகேஷ் சந்தர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

E-Behind Excellence Awards 2024 நிகழிவை சிறப்பாக வழங்கியE-Behind Entertainment திரு.சதிஷ் குமார், திரு .ஸ்ரீதர், திரு.சக்திவேல், திரு.பார்த்திபன், திரு.பிரசன்னா, திரு.பாலமுருகன், திரு.பிரபு மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய டெஸ்ட் யுவர் மெட்ரிக்ஸ் நிறுவுனர்திருமதி.உமாமஹேஸ்வரி, சாய் கன்சுலேட்டன்சி நிறுவனர் திரு.இசக்கி முத்து அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களும், வருகை புரிந்த அனைவரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

Continue Reading

Uncategorized

தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர்  உத்தரவு!

Published

on

By

மெரினாவில் இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி, வான் சாகச நிகழ்ச்சி.விமான சாகசம் – சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு.

கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் 5 பேர் உயிரிழப்பு  . சுமார் 90-க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் .5 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததை அடுத்து,  தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர்  உத்தரவு!

சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்து நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Continue Reading

Uncategorized

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா !

Published

on

By

ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், TRB ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குநர் சிவராஜா ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு கூறினார்.

Continue Reading

Trending