தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.
1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.
தட்டி தூக்கிய டிஆர் :
இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.
இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.
சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .
வெற்றி நாயகன் :
சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.
80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.
அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.
இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.