Connect with us

Entertainment

80களில் காதல் காவியமான டி ஆர் பாடல்கள்! மாஸ் ஹிட் அடித்த

Published

on

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.

1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.

தட்டி தூக்கிய டிஆர் :

இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.

இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.

சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .

வெற்றி நாயகன் :

சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.

80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.

இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

வசூல் சாதனையில் அஜித்தின் குட் பேட் அக்லி

Published

on

By

ஜித் குமார் நடிப்பில்,மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அஜித்தின் நடிப்பை பாராட்டி கோலாகலம் படுத்தி வருகின்றனர் . இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்த்துள்ளதால் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

 குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கம் நிரம்பி வழிகிறது, தொடர் விடுமுறை காரணமாக மேலும் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் வசூல் சாதனையாக 30 கோடி ரூபாய்யை அள்ளி ரெகார்ட் செய்துள்ளது ஜித்தின் குட் பேட் அக்லி படம்.

Continue Reading

Entertainment

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி பிரசாந்த் கூட்டணி!

Published

on

By

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரசாந்த், அதிரடி இயக்குனர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஹரியுடன் இணையும் இரண்டாவது  படமாகும். ஏற்கனவே தமிழ் என்ற படத்தில் இவ்விரு கூட்டணி இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது, சுமார் ​​24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இது செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகி உள்ளது

பிறந்தநாள் நாளில் முக்கிய அறிவிப்பு ! ‘கடைசியா அந்தகன்’ படத்தில் நடித்த பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களிடமிருந்து பல ஸ்கிரிப்ட்களை கேட்டு ஆராய்ந்து வந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது, ​​இந்த வரவிருக்கும் படம் அவரது 55 வது படத்தின் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கிறார் பிரசாந்த் ஒரு பிரபல இயக்குனருடன் மிக பெரிய மறுபிரவேசத்தைக் காண களமிறங்கியிருக்கிறார் நடிகர் பிரசாந்த் . தயாரிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார் .இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது , மற்ற முன்னணி மற்றும் துணை வேடங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

ரத்தினம்’ படத்திற்குப் பிறகு ! விஷாலை வைத்து ‘ரத்தினம்’ படத்தை இயக்கிய ஹரி, இடைவெளியில் பல்வேறு நடிகர்களுடன் கதை காண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அவர் இப்போது பிரசாந்தை கதையின் நாயகனாக இறுதி செய்துள்ளார். சூரியா, விக்ரம், சிம்பு, அருண் விஜய், விஷால் என பல ஹீரோக்களை வைத்து மாஸ் படம் கொடுத்த ஹரி டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து புதிய கதை கலத்துடன் காலத்தில் இறங்கியுள்ளார்.

Continue Reading

Entertainment

வேட்டையன் – விமர்சனம் !

Published

on

By

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ளது வேட்டையன் திரைப்படம்.

ஜெயிலர் போன்ற மாஸ் படத்தை கொடுத்த ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றப்போல் சிம்பிள் மாஸாக நடித்துள்ளார்.

ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள TJ ஞானவேல் அவரது அதே பணியில் முக்கிய கருத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பராக படமாக்கியுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களுக்குத்த தேவையான மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள், என கமர்சியலாகவும் டச் கொடுத்து சபாஷ் வாங்குகிறார்.

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் ரவுடிகளை சுட்டுத்தள்ளிக்கிறார் . குற்றத்துக்கு என்கவுண்டர் தான் தீர்வா? என கேள்வி எழ ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது அது பெரும் பிரச்சனை ஆக மாறுகிறது . அதனை கண்டுபிடித்து எதிரியை என்கவுண்டர் செய்கிறாரா? அல்லது சட்டப்படி தண்டனை வாங்கித்தருகிறாரா? என்பது தான் மீதி கதை. என்கவுண்டர் பற்றியும் நீட் தேர்வை வைத்து நடக்கும் மோசடிகளை வைத்து மாஸாக படத்தை கொடுத்திருக்கிறார் TJ ஞானவேல்.

இந்த படத்தின் ரஜினிகாந்த்க்கு அடுத்தது அதிகம் பேசப்படும் நபராக பஹத் பாசில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் ரஜினியுடன் வலம் வருகிறார் . அமிதாப் பச்சன் ,மாஞ்சு வாரீர், துஷார விஜயன், ராணா, ரோகினி, அபிராமி ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்.

அனிருத்தின் இசை ஜெயிலர் படத்துக்கு கை கொடுத்ததுபோல் இந்த படத்திலும் கை கொடுத்துள்ளது. மனசிலாயோ பாடல் ரசிகர்களை ஆட வைத்துள்ளது.

காமெடிக்கு இடமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது இருந்தாலும் பஹத் பாசில் நம்மை அங்கங்கே சிரிக்க வைக்கிறார் . படம் ஒரு சிறிய திரில்லர் திரைப்பட பாணியில் நம்மை நகர்த்தி செல்கிறது .

ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படமாக வடிவமைத்துள்ளார்  TJ ஞானவேல்.

E-Behind Movie Rating !

Continue Reading

Trending