Connect with us

Sports

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி ஜூன் மாதத்தில் துவங்கி, 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்தெந்த அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் மோதப் போகிறது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி முதல் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது.

அதற்கு அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது. பின்னர் ஜூலை கடைசி வாரம் மற்றும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அடுத்து செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது.

இதைத்தொடர்ந்து அக்டோபரில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.

நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி 2வது வாரம் வரை ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் பங்கேற்க உள்ளது.

அதன் பின் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது.

அடுத்து மார்ச் மாதத்தில் 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

ரோஹித்! ரோஹித்! விண்ணை பிளந்த சத்தம்!

Published

on

By

ஐபில் துவங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியத்திலும் எதிரொலிக்கும் சப்தம். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபில் தொடர் 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக துவங்கியது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். இந்திய நகரமான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹைட்ராபாத் ஆகிய நகரங்களை அணிகளாக பிரித்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களை ஏலம் எடுத்து ஒரு அணியாக விளையாடுவர். சுமார் 16 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கியது நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஹார்டிக் :

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஏற்கனவே கோப்பையை வென்ற பொது அணியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் அணியில் இணைந்து கேப்டனாக அணியை வழிநடத்தி 2022 ஆம் ஆண்டு நடத்த ஐபில் தொடர் குஜராத் வெற்றிப் பெற வழிவகுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இவரது தலைமையிலான குஜராத் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியை தழுவியது.

2024 ஆம் ஆண்டு தொடரின் அறிவிக்க விருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. இதனை ஒப்புக்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிருவாகம் சுமார் 15 கோடி கொடுத்து வாங்கியது. அதுமட்டும் இன்றி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் இணையத்தளத்தில் வெகு கொண்டு எழுந்தனர். மீண்டும் ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டன் ஆக வேண்டும் என கூக்குரலிட்டனர் .

கூச்சலிட்ட ரசிகர்கள்

ஐபில் துவங்கினால் சரியாகிவிடும் என பலரும் நினைத்திருந்த வேளையில்,
மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியா தலைமையில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் ஸ்டேடியத்தில் தனது முதல் ஆடியது. இதில் ஹர்டிக் பாண்டியாவுக்கு எதிராகவும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகவும் அரங்கில் உள்ள மொத்த ரசிகர்களும் கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை பௌண்டரி அருகே நிற்குமாறு கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்கைக்காட்டும் வீடியோ இணையத் தளத்தில் வைரலாக ரசிகர்களின் கோவம்

அதிகரிக்க துவங்கியது. இரண்டாவதுப் போட்டியிலும் ரசிகர்கள் ஹார்டிக் பாண்டியாவிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சொந்த ஊரில் நடைபெறும் 3ஆவதுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான ஆதரவை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் இரண்டு போட்டிகளில் ரசிகர்கள் எழுப்பி குரலோடு ஹார்டிக் பாண்டியாவிற்கு அதிக எதிர்ப்பு குரல் மும்பை மைதானத்தில் இருந்து வெளி வந்தது. போட்டி துவங்குவதுக்கு முன்பு டாஸ் போடும் போது மைதானத்தில் உள்ள கிட்ட்டத்தட்ட 80% பேர் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய அணி வீரருக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்ப்பு வெளிவந்தது இதுவே முதல் முறை. ஏன் ரசிகர்ககள் இந்த அளவுக்கு கோவத்தை வெளிப்படுத்தினர் ஹார்டிக் பாண்டிய அப்படி என்ன செய்தார் ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஹார்டிக் பாண்டியவா? இல்லை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் இதனை செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் பதவியில் அங்கம் வகித்த ஹார்டிக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அழைத்து வந்தது தவறில்லை.

ஆனால் சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மாவை காரணமின்றி நீங்கியது தான் சர்ச்சையானது. இதெல்லாம் அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகக் குழு முடிவு செய்வது என்றலும் மறைமுகமாக இல்லாமல் ஒற்றுமையுடன் பேசி அறிவித்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

எதிர்பார்ப்பு

இதற்கு முன்பு கூட சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ளார். ஏன் கங்குலி,சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் இளம் வீரர்கள் தலைமையில் விளையாடி உள்ளனர். தற்போது கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ருத்திராஜ் தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என பல முன்னணி வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களின் கருத்துக்களை அன்றாடம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அணுகி சம்மதிக்க வைத்த முறை தான் முக்கியம். மும்பை இந்தியன்ஸ் அணியும் இதனை செய்திருந்தால் இந்த எதிர் குரல் வெளிவந்திருக்காது. 5முறை
சாம்பியன் அசைக்க முடியாத அணி என்ற பெருமை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று இந்த சிறு பிரச்சனையில் தோல்வியைத் தழுவிவருவதாக ஆதங்கப் படுகின்றனர் ரசிகர்கள். அடுத்த ஆண்டு வீரர்கள் கலைக்கப்பட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– சதிஷ் குமார்

 

 

Continue Reading

Sports

வருகிறதா ஐபில் 2025 காண மெகா ஆக்ஷன்! வீரர்களை தக்கவைக்க முடியுமா ?

Published

on

By

2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வில்லை .

2022 ஐபிஎல் மெகா ஏலத்தில், அதிகபட்சமாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை அணிகளுக்கு ஐபில் நிர்வாகம் வழங்கியது. நான்கு வீரர்களும் 3 இந்தியர்கள் + 1 வெளிநாட்டு அல்லது 2 இந்தியர்கள் + 2 வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்பது விதி .தற்போது வீரர்களை தக்கவைத்துக் கொள்வதின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றாலும்,  இதில் மூன்று இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியினர் தக்க வைக்க முடியும் வெளிநாட்டு வீரர் 2 பேரை தக்க வைக்க முடியும் கூறப்படுகிறது.

இதற்கு பல அணிகள் ஆதரவு தெரிவித்தாலும் சில அணிகள் எதிர்க்கின்றனர்,காரணம் முக்கியமாக வீரர்கள் ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுத்து வாங்க நேரிடும். குறிப்பாக சென்னை, மும்பை இதற்கு எதிராகவே இருக்கும். ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் 3 வீரர்களுக்கு மேல் கொடுத்தால் அணியில் பெரிதான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்கவைப்பதை விரும்பவில்லை.

அதிகபட்ச 3 இந்திய வீரர்கள் என்ற கணக்கில் மட்டுமே தக்க வைக்க முடியும் என்றால், அது சில அணிகளுக்கு மகிழ்ச்சியானதாக அமையும். உதாரணமாக ராஜஸ்தானை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோரை தக்க வைக்க விரும்பும் காரணம் இவர்களை ஏலத்தில் விட்டால் மீண்டும் எடுப்பது கடினம் அதுமட்டும் இன்றி அதிக தொகைக்கு வாங்க நேரிடும். மற்ற அணிவீரர்களை ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுக்க நேரிடும்.

பஞ்சாப் கிங்ஸ் :

இந்த அணிக்கு தக்க வைக்க பெரிய அளவில் வீரராகள் இல்லை என்றாலும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மாவும் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர்களை தாண்டி வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கம் வாய்ப்பு சாம் கரண் மற்றும் ககிசோ ரபாடா இருக்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் முதலில் தக்கவைக்க விரும்பும் நபராக ஷுப்மான் கில் இருப்பார். இவரது சிறப்பான ஆட்டமும் கேப்டனனாக செயல்படும் முறையுமே முதல் வாய்ப்பாக இருக்கிறது. மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதை ஏற்கன

வே காட்டியுள்ளார். ஷுப்மான் கில் தவிர, முகமது ஷமியையும் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற வாய்ப்புகள் கேன் வில்லியம்சன், ரஷித் கான் ஆக இருக்கலாம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நீக்க முடியாத பெயராக வளம் வருவது விராட் கோலியின் பெயர். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் .இவரை தவிர இந்திய வீரர்களை தக்க வைக்க நிர்வாகம் விரும்புமா என்பது கேள்விக்குறிதான். 2024 சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ், மட்சுவெல் ஆகியோர் இடம்பெறலாம்

டெல்லி கேப்பிட்டல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் பொறுத்த மட்டில் விபத்து காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ரிஷப் பண்ட், 2024 சீசனில் மீண்டும் கேப்டனாக ப

தவியேற்று நடத்தி வருகிறார் இதனால் இவரது பெயர் முதலில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இவரைத் தவிர அக்சர் படேல், குலதீப் யாதவ் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள நிர்வாகம் விரும்பும் . டெல்லி அணி வெளிநாட்டு வீரர்கள் இடப்பெற கூடும் என எதிர்பார்பது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், மிட்செல் மார்ஷ் .

மும்பை இந்தியன்ஸ்:

அனைத்து தொடரில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2024 ஆம் தொடரில் தடுமாறி வருகிறது.ஐபிஎல் 2025க்கான வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகப்பெரிய தலைவலியைக் காணும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பை தக்கவைக்கப்படலாம், இவரைத் தவிர சூரியகுமார், பும்ப்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள். ரோஹித் ஷர்மா தக்கவைப்பது அவரது முடிவில் தான் இருக்கிறது. டிம் டேவிட் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2025 க்கு தக்கவைக்கப்படும் முதல் நபராக இருப்பது கேஎல் ராகுல் . கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என பல பொறுப்புகளை வைத்துள்ளார். இவரை தாண்டி இந்திய அணி வீரர்களில் ரவி பிஷ்ணோய் மயங்க் யாதவ் இடம்பெறலாம். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பெற வாய்ப்பு பூரான்,ஸ்டோனிஸ் இருக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

வரும் 2025 ஆவது ஐபிஎல் தோனி இல்லாத ஐபிஎல்லாக இருக்க கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில்
ஐபிஎல் 2025 க்கு சிஎஸ்கே தக்கவைக்கும் முதல் பெயர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகும். ருத்துராஜ் தவிர, பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே தக்க வைத்துக் கொள்ள விரும்பும். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் மெயின் அலி, பதிரான கிடைக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பெரும்பாலும் ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், வருண் சக்கரவத்தி ஆகியோரைத் தக்க வைத்துக் விரும்பும். மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டும். இந்த அணியில் முக்கிய வெளிநாட்டு வீரர்களாகப் பார்க்கப்படுவது ரஸ்செல், நரேன், ஆகியோரை தக்க வைக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இறுதியாக, 2024 சீசன்னில் சிறப்பாக விளையாடுவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய வீரர்கள் பெரிதாக இல்லை அபிஷேக் ஷர்மாவைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்புக் காட்டும். வெளிநாட்டு வீரர்களான ஃபினிஷர் ஹென்ரிச் கிளாசென் துவக்க அதிரடி வீரர் ஹெட் ஆகியோரை தக்க வைக்கும்.

 

 

Continue Reading

Sports

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக U-19 WC கோப்பையை கைப்பற்றியது.!

Published

on

By

U19 உலக கோப்பை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிகப்பெரிய தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் துவங்கியது, சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக U-19 WC கோப்பையை கைப்பற்றியது.!. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நினைக்கப்பட்ட 50 ஓவர்களில் 253/7 எடுத்து. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களும், ஆலிவர் பீக் 46 ரன்களும் எடுத்தனர். இந்தியா பந்து வீச்சை பொறுத்தவரையில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 254 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியஇந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தினால் 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்துதோல்வியை தழுவியது. இந்திய தரப்பில் ஆதர்ஷ் சிங் – 47,  முருகன் அபிஷேக் 46 எடுத்தார்.

 

ஆஸ்திரேலியா - 50 ஓவர்களில் 253/7

ஹாரி டிக்சன் - 42
ஹக் வெய்ப்ஜென் 48
ஹர்ஜாஸ் சிங் - 55
இந்தியா பந்துவீச்சு
ராஜ் லிம்பானி - 3/38
நமன் திவாரி - 2/ 63

இந்தியா 43.5 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் 

ஆதர்ஷ் சிங் - 47
முருகன் அபிஷேகம் - 42
ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ராஃப் மேக்மில்லன் - 3/43
மஹ்லி பியர்ட்மேன் - 3/15

Continue Reading

Trending