Connect with us

Sports

கோபிசந்த், ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால்உலக அளவில் ஜொலிக்கும் இளம்

Published

on

கோவையில் இந்திய பேட்மின்டன் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், 
 
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
 

பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வமும் திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களை சாதனையாளர்களாக மேம்படுத்தும் நோக்கில் கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் பிரபல ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி, பேட்மிண்டன் ஜாம்பவான் கோபிசந்த் வழிகாட்டுதலில் நடைபெறும் ‘பேட்மிண்டன் குருகுல்’ எனும் பயிற்சி பள்ளியுடன் சுமார் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒப்பந்தத்தால் தேசிய மற்றும் உலக அளவில் சிறப்பான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதை பகிர நடந்த செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (5.4.25) ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’  பயிற்சி பள்ளியின் நிறுவனர் சுப்ரியா தேவ்கன் மற்றும் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா கலந்து கொண்டனர்.

ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், சுமார் 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமி மற்றும் பேட்மிண்டன் குருகுல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும், இதனால் இப்போது வரை 40 மாணவர்கள் விளையாட்டு வீரருக்கான (professional) பயிற்சியையும், 100 மாணவர்கள் துவக்கநிலை முதல் இடைநிலை அளவில் பயிற்சியையும் பெற்று வருகின்றனர் என கூறினார்.

“பேட்மிண்டன் குருகுல்-உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், 7 முதல் 8 மாணவர்கள் எங்கள் அகாடமியில் இருந்து ஜூனியர் மற்றும் சீனியர் நிலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். 8 முதல் 9 வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவிலான 17 மற்றும் 19 வயதுக்கு கீழானவர்களுக்கான போட்டிகளில் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர்,” என தெரிவித்தார்.

இந்த அகடெமியில் இரட்டையர் பிரிவுக்கான பயிற்சி பெற்ற தஞ்சையை சேர்ந்த ஹரி மற்றும் ரூபன் எனும் வீரர்கள் இங்குள்ள தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா உடன் பயிற்சியை முடித்த பின்னர் கோப்பிசந்த் கீழ் ஹைதராபாத்தில் பயிற்சி பெற்று இப்போது உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசைப்பட்டியலில் 45ம் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் இந்த அகாடமியில் பயிற்சி பெற்ற நர்தனா, அருண் முருகன் போன்றவர்கள் 2024-25க்கான தேசிய விளையாட்டுகளில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ராக்ஸ் அகாடெமியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கோப்பிசந்த் கீழ் பயிற்சி எடுக்க வாய்ப்புகள் பெறுகின்றனர். இதுபோன்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால் சிறந்த விளைவுகளை பெற்றுவருவதால் அண்மையில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சுவேதா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கோப்பிசந்த் பேசுகையில், இந்த அகடெமியில் பயிற்சி எடுக்கும் பாட்மிண்டன் மாணவர்கள் வெளிப்படுத்தும் திறனையும், கோவையிலிருந்து வெளிவரும் திறமைசாலிகளையும் கண்டு தான் வியப்பதாக கூறினார். ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி தரப்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டமைப்பு, பயிற்சி மற்றும் ஊக்கத்தை அவர் பாராட்டினார்.

தொடர்ச்சியாக இத்தனை பேர் திறமைகளை வெளிப்படுத்தி வருவதற்கு இந்த அகடெமியும், அதன் பயிற்சியாளர்களும், குறிப்பாக தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதாவை அவர் பாராட்டினார். இங்குள்ள விளையாட்டு வீரர்கள் வரும் ஆண்டுகளில் மேலும் உயரத்தை எட்டுவார்கள் என அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

ஐ.பி.எல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பு !

Published

on

By

ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ .

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வாய்ப்பு

தேதி மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்படும் மீதமுள்ள போட்டிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – பிசிசிஐ வட்டாரம்.

 

Continue Reading

Sports

ஒரு வழியாக வெற்றிப் பெற்ற சிஎஸ்கே !

Published

on

By

தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து ரஹானே 48 ரன்களும் ரசூல் -38 ரன்களும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அஹமது 4 விக்கெட் எடுத்தார் .

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 60/5 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ப்ரேவிஸ் 52 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே  45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர் முழுவதும் தனது சொதப்பலான ஆட்டத்தினால் ரசிகர்களை வெறுப்பேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி ஆறுதலாக இருந்துள்ளது .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதுபோல் கண்டிப்பாக உணரும். பவர் பிளேயிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ன் ஐந்து விக்கெட்டுகள் இழக்கச் செய்திருந்தாலும், நடு ஓவர்களில்சரியான திட்டம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அவர்கள் பிற போட்டிகளில் விளைவுகளை நம்ப வேண்டியுள்ளது. அதேசமயம், மீதி உள்ள போட்டிகளில் வென்றே ஆகவேண்டிய நிலைக்கு மாறியுள்ளனர்.

Continue Reading

Sports

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு !

Published

on

By

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார் . ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவிப்பு. இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும்  நிலையில் ரோகித் ஷர்மா ஓய்வு அறிவிப்பு .

அறிக்கையில் அவர் தெரிவித்தது

” அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை  பகிர விரும்புகிறேன். வெள்ளை உடையில் என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு பெரும் பெருமை. கடந்த ஆண்டுகளில் நீங்கள் அளித்த  அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோகித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வை அடுத்து எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டனுடன் களமிறங்குகிறது இந்தியா.

Continue Reading

Trending