Connect with us

நிகழ்ச்சிகள்

தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி

Published

on

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.மார்ச் 28 முதல் 31,2025 வரை ஹரியானாவில் நடைபெற்ற 21வது மூத்த, ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எலீட் டவுன்ஹில் (Downhill) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் திலோத்தம்மா.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சித்தாபுதூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் திலோத்தம்மா மற்றும் அவர் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கலந்துகொண்டனர்.இந்த அதிக ஆபத்தான டவுன்ஹில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான். இந்த பிரிவு மிகவும் கடுமையானது; நாட்டில் ஏறத்தாழ 3-4 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள், என அவரின் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கூறினார்.

இந்த டவுன்ஹில் போட்டி ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் எனும் பரந்த மலைப்பகுதியில் மிகவும் சவாலான பாதையில் நடைபெற்றது. வழக்கமான 1 கி.மீ பாதையைவிட இந்த வருடம் 2 கி.மீ தூரம் கொண்ட டிராக், வீரர்களின் திறமைக்கு சவாலாக விடும் விதத்தில் இருந்தது என திலோத்தம்மா கூறினார்.மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தன்னுடன் போட்டியிட்ட நிலையில், திலோத்தம்மா 5 நிமிடம் 45 வினாடிகளில் அந்த 2 கி.மீ. தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கபாதகத்தை தட்டிச்சென்றார்.

“ டவுன் ஹில் சைக்ளிங் போட்டிகளில் கடுமையான பாதைகள் இருக்கும். அதை கடப்பது பற்றி முடிவுகளை நாம் சிறிது நேரத்திலேயே எடுக்கவேண்டும். எனவே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த கவனமும் தைரியமும் தேவைப்படுத்தியது,” என்கிறார் திலோத்தம்மா.வேலூரைச் சேர்ந்த இவரை இவரின் தாய் மட்டுமே உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார். சைக்ளிங் மீது பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் டவுன் ஹில் போட்டிக்காக கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மலைபகுதிகளில் பயிற்சி செய்ய கட்டுப்பாடுகள் இருப்பதால், தனியார் எஸ்டேட்டில் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டதாக அவரும் அவரின் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.

தன்னுடைய வெற்றிக்கு தன் தாய், பயிற்சியாளர் கோகுல், தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன், மற்றும் கோவை நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஆதரவு காரணம் என கூறுகிறார்.“தமிழ்நாடு சைக்கிள் அசோசியனில் இருந்து புள்ளிகள் கிடைத்ததும், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற வாய்ப்புள்ளது. போதிய ஆதரவு கிடைத்தால், உலக மேடைகளில் வெற்றி பெற்று என் மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,” என்கிறார் திலோத்தம்மா.

தன்னுடைய சைக்கிளைப் பற்றிக் கூறும் போது,“சுயமாக ஒரு டவுன்ஹில் சைக்கிள் வாங்க முடியவில்லை. சர்வதேச போட்டிக்கு தேவையான ஆரம்பநிலை சைக்கிள் ரூ.2-3 லட்சம் ஆகும். அதுவே நவீன வகை சைக்கிள் வாங்க ரூ.7-8 லட்சம் வரை செலவாகும். அதை வாங்க இயலவில்லை. இந்த முறை என் பயிற்சியாளர் தன்னுடைய சைக்கிளை எனக்காக கொடுத்தார். இந்த விளையாட்டில் மேலும் உயரம் தொட நான் ஸ்பான்சர்களின் ஆதரவை நாடுகிறேன்” என்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

மனதை அலைபாய செய்யும் மொபைல் , சீரியல், சினிமாகளில் மாணவர்கள் மூழ்கிவிடக்கூடாது – தாமு !

Published

on

By

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அவர்களின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கு புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டியாக இருந்து வருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் நடிகர் தாமு அவர்கள் . இதுவரை, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில், தனது அற்புதமான சிந்திக்கும் உரையை வழங்கி ,ஆழ்மன பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக கோவை அவிநாசி, அ.குரும்பபாளையம், வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி சார்பில், கொங்கு கலையரங்கில் , ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடம் தனது உரையை வழங்கினார் நடிகர் தாமு .

நடிகர் தாமு பேசியது :

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், மதிப்பெண் குறைவதற்கும், தேர்வின் மீது பயம் வருவதற்கும் காரணம், மாணவ, மாணவியரின் இயலாமையோ, அறியாமையோ அல்ல; நேரத்தை வீணடிக்க செய்து, மனதை அலைபாய செய்யும் மொபைல் போன்கள், ‘டிவி’ சீரியல் கள், சினிமாக்களில் அவர்கள் மூழ்கிவிடுவது தான்.

அவற்றால் ஏற்படும் மனச்சிதைவுக்கு மருந்து கிடையாது; மாறாக, மன மாற்றமே முக்கியம். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உள்வாங்கி, ஆழ்மனதில் நிறுத்திக் கொள்வதால், வெற்றி சாத்தியமாகும். வலைதளங்களில் மனதை சிறைபடுத்தி, அடிமைப்பட்டு கிடக்கும் நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

இளைஞர்களின் ஆற்றல் அதிகமுள்ள நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில் 53.8 சதவீதம், அமெரிக்காவில், 58.8, சீனா, 54.9, ரஷ்யா, 59.1 சதவீதம் என்ற அளவில், இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. அதே நேரம், இந்தியாவில், 64.5 சதவீதம் இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலில், மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

மொபைல் போன்களில் விதம், விதமான செயலிகள் வழியாக, மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் மனதை பாழ்படுத்தும் செயல் என்பது, வெளிநாட்டு சதி என்பதை உணர வேண்டும்.

Continue Reading

கோயம்பத்தூர்

வி வொண்டர் வுமன் விருதுகள் 2023: பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்!

Published

on

By

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ வொண்டர் வுமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கற்பகம் அகாடமியுடன் இணைந்து , பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 14 பெண் சாதனையாளர்களை ஆகஸ்ட் 26 அன்று ஜென்னிஸ் ரெசிடென்சியில் வீ வொண்டர் வுமன் விருதுகள் வழங்கி கவுரவித்தது.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், Mrs.இந்தியா எர்த் 2018 வெற்றியாளர் ரிங்கி ஷா, அருண் , அரவிந்த் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்கள் விருதுகளை வழங்கினர்.பத்மஸ்ரீ விருது பெற்ற ஆர்.முத்துக்கண்ணம்மாள், மூத்த சதிர் நடனக் கலைஞர், வீ வொண்டர் வுமன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

25000 கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையான முறையில் பிரசவம் செய்ய வெற்றிகரமாக உதவிய GKNM மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமுதா கிரிதர் வீ வொண்டர் வுமன் ஐகான் விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.

அனைத்து விருது பெற்றவர்களும் துல்லியமான தேர்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் துணிச்சலான செயல்கள் மற்றும் அற்புதமான சாதனைகள் மூலம் சமூகத்தை ஊக்கப்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 

Continue Reading

Uncategorized

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா !

Published

on

By

ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், TRB ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குநர் சிவராஜா ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு கூறினார்.

Continue Reading

Trending