Connect with us

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்!

Published

on

முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க உள்ளது . இதில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. .ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

இதென்படி மக்கள் நீதி மயமத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளது உறுதி ஆகியுள்ளது.

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

செய்திகள்

+2ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

Published

on

By

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்

93.76%  2022

94.03%.  2023

94.56%  2024

95.03%    2025

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்

தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்

மாவட்ட வாரியாக:

அரியலூர்: 98.82

ஈரோடு: 97.98

திருப்பூர்: 97.53

கோவை: 97.48

கன்னியாகுமரி: 97.01″

கணினி அறிவியலில் அதிகம் பேர் சென்டம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 9,536 பேர் 100 மதிப்பெண்கள்.

கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர்

வேதியியல் – 3,181 பேர்

கணிதம் – 3,022 பேர்

வணிகவியல் – 1,624 பேர்

கணக்கு பதிவியல் – 1,240 பேர்

Continue Reading

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தலைவர்கள் பாராட்டு !

Published

on

By

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் இந்திய ராணுவதுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ராணுவத்கை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழகம் இராணுவத்தின் பக்கம் நிற்பதாக கூறியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Continue Reading

Trending