மனிதனுக்கு தனது வாழ்வில் தூக்கம் மிகவும் முக்கியமானது ஒரு நல்ல தூக்கத்தின் பரிசு விலைமதிப்பற்ற ஒன்றாகும். சுமார் ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் 7 மணி நேரமாவது தூங்குவது நம் உடலுக்கு நாம் வழங்கும் பரிசு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சராசரியாக இரவு 9.30 மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்த ஒன்று. தற்போது உள்ள நீவீன உலகில் பல கண்டுபிடிப்புகள் வந்த பிறகு தூக்கத்தை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம். குறிப்பாக செல் போன் வந்த உடன் பலரது நேரத்தை தனக்குரிய நேரமாக உறிஞ்சிக் கொள்கிறது இந்த செல் போன்கள் . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல் போனில் மூழ்கி நீச்சல் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இரவு வேலை என்று பகலை மறந்து வாழ்க்கையில் வெற்றிப் பெற ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் தீமைகளை பெரிதும் கவலைப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள்.
ஆரோக்கியத்தைக் காக்கும் தூக்கம்:
மருத்துவர்களின் கூற்றுப்படி, 7 முதல் 8 மணிநேரங்களுக்கு ஓய்வெடுக்காமல் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என குறிக்கின்றனர். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மனநலப் பிரச்சனைகளை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வாழ்வில் பலர் ஏதாவது பிரச்சனைகளுடன் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் இருந்து மீண்டு எல்லா கவலைகளையும் மறக்க வைக்கக் கூடிய ஒரு மருந்து தூக்கம். வாழ்கையில் எவ்வுளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறக்கடித்து நிம்மதியினை தருகிறது தூக்கம்.இதனை கருத்தில் கொள்ளாமல் பலர் இரவு வேளை தாண்டியும் செல் போனை பயன்படுத்திக் கொண்டும், கேம்ஸ் விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் ஒரு நாளைக்கு 7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்பதை பலரும் மீறுகிறார்கள். சரியான நேரத்துக்கு தூங்கவில்லை என்றல் பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும் என்பது பலருக்கும் தெரிஞ்சிருந்தும் அதை பொருட்படுத்துவதில்லை என்பதே வருத்துக்கூடிய விஷயம்.
தூக்கம் தடையால் வரும் பிரச்சனை :
தூக்கம் குறைவானால் முதலில் பாதிப்பது மனநலம்தான் எதை செய்கிறோம், செய்வதை சரியாக செய்கிறோமா? எனப் பல கேள்விகள் நம்மை வந்து தாக்கும். இதேப் போல நாள் அடைவில் அறிவுத்திறன் பாதிப்பு அடைந்து சிந்திக்கும் திறன் குறைந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கத் ஆரம்பிக்கும். ஜீரண கோளாறு, படபடப்பு, பயம் என பட்டியலிட வழிவகுக்கும் இந்த குறைவான துக்கம் .
நல்ல தூக்கம் கிடைக்க:
அலாரம் அடிக்கும் முன்பாகத் தானாகவே விழித்தெழும். அம்மாதிரி இயல்பாக எழுவதற்கு உடல் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அதுதான் ‘நல்ல தூக்கம் நம் உடலுக்குத் தேவையான துக்கம் .இந்த மாதிரியான தூக்கம் அனைவருக்கும் கிடைப்பதில்லை நல்ல தூக்கம் கிடைக்க படுக்கும் நேரத்தில் மனதை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள் நாம் பின்பற்றுதல் வேண்டும். குறிப்பாக நாம் உறங்கும் இடம் வெளிச்சம் இல்லாத இடமாக இருக்க வேண்டும். படுக்கையறையில், சரியான வெப்பநிலை நம் தூக்கத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று.சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள் நாம் அமைத்துக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு முக்கியமான ஒன்று. தொலைக்காட்சி, செல் போன் போன்ற உபகரணங்களை உறங்க செல்ல சுமார் 1 மணிநேரத்துக்கு முன் மறந்திட வேண்டியது கட்டாயம் .
உறங்கச் செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் அமைதியான தூக்கத்துக்கு நம் உடலுக்கு ஏற்ற சமநிலையான உணவை உண்ண வேண்டும். “நன்றாக தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த வாழ்வை பயனுள்ளதாக்கும். தூங்கும் போது மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், அதிகமாக யோசிப்பதை நிறுத்தி விட்டு விரைவில் தூங்க முயற்சி செய்யுங்கள். நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருந்தால் நன்றாக தூங்கலாம். உங்கள் உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது குடித்துவிடுங்கள் நீங்கள் தூங்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் கால் பிடிப்புகளை வராமல் தடுக்கலாம் தூக்கமும் தடைபடாமல் இருக்கும்.சரியான தூக்கம் கிடைப்பது ஒரு கடினமான பணி அல்ல, ஆனால் எளிதாக கிடைக்க சில முறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். தூக்கம் நம் உடலுக்கு கிடைத்த ஓர் புதையல் அதை பாதுக்காப்பாக வைத்திருப்பது நமக்கு பலன் தரும் என்பதை அறிந்து உறங்குவோம்.
-சதீஷ்குமார்