Connect with us

அரசியல்

முதலமைச்சர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! ரூ. 15 லட்சம் விவகாரம் !

Published

on

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் – இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை” என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார். 2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார். ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள்.

ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது. ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது

அரசியல்

தமிழக பாஜகவின் தலைவராக நைனார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்!

Published

on

By

பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். 

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை பாஜகவின் மாநிலத்தின் தலைவர்  பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.  இவரை எதிர்த்து யாரும் போட்டியில்லாத நிலையில் போட்டியின்றி  நயினார் நாகேந்திரன் தேர்வாகிறார் 

 நயினார்  நாகேந்திரன் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது (2001-06), அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டு போக்குவரத்து, தொழில்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை வகித்தார். 2011 ஆம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, ​​அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2006 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அந்த இடத்தை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்நயினார்நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.



Continue Reading

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Published

on

By

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Continue Reading

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்!

Published

on

By

“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்;

தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”

டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு  விஜயதரணிஎம்.எல்.ஏ பேட்டி

Continue Reading

Trending