Connect with us

Tech

நினைவில் நின்றவை மறக்கமுடியுமா ?

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Published

on

Photo: Shutterstock

இன்று தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பல பரிமாணங்களை அடைந்துள்ளதை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம் சுமார் 5 முதல் 10 வருடத்திற்கு முன் பாடலைக் கேட்க பென்ட்ரைவ், சிடி என்ற பொருளை பயன்படுத்தி பாடலை கேட்டு மகிழ்ந்தோம். இதன் அடுத்தகட்ட நகர்வாக இன்று மென்பொருள் (ஆப்) பயன்படுத்தி எளிதாக பாடலை கேட்கும் வசதிகள் நமக்கு கிடைத்துள்ளது. பல பரிமாற்றங்களை நாம் பெற்றாலும் அன்று டேப் ரிகார்டரை பயன்படுத்தி கேசட் மூலம் கேட்கும் மகிழ்ச்சி எண்ணில் அடங்காதது. அதில் ஒரு வகையான சுகம் இருப்பதை அதில் பாடல்களைக் கேட்டவர்களை ம(ற)றுக்க முடியாது.

அந்த எண்ணில் அடங்கா மகிழ்ச்சியை திரும்பி பார்க்கவே (பிளாஷ்பக்) இந்த கட்டுரை! இன்று படத்துக்கு பாடல்கள் கட்டாய அவசியம் இல்லை என்ற நிலை சினிமாவில் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் பாடல்களே இல்லாத பல திரைப்படங்கள் வெளியாகி யுள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அன்று அப்படி இல்லை படத்துக்கு இணையாக பாடல்கள் முக்கியத்துவம்  வாய்ந்து இருக்கும் பாடல்கள் ஒன்றிருக்கும். ஒரு திரைப்படம் வெளியாக ஒரு மாதத்துக்கு முன்பு ஆடியோ கேசட் வெளிவிடும். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் இருந்தது சிறிய டேப் ரிகாடர் (படத்தில்
குறிப்பிட்டுள்ளது போல).

ஒரிஜினல் – டூப்ளிகேட் :

ஒரு படத்தின் பாடல்கள் வெளியானவுடன் அந்த கேசட்டை வாங்க ஆர்வமாக இருப்போம் அந்த கேசிட்டின் விலை 10ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இருக்கும். 10ரூபாய் நமக்கு கிடைப்பது எளிதான காரியமல்ல. கஷ்டப்பட்டு அந்த 10 ரூபாயை சிறிது சிறிதாக சேமித்து மியூசிக்கல் கடைக்கு சென்று அதனை வாங்கி கேட்டு மகிழ்வோம். இன்று பென்ட்ரைவில் பலமுறை அதில் இருக்கும் பாடல்களை அழித்து நமக்கு தேவையான பாடல்களை பதிவேற்றம் செய்துகொள்ள முடியும். இதை அன்றே ஆடியோ கேசட் மூலம் செய்துள்ளோம். ஆம் பாடல் ஒரிஜினல் கேசட் என்றும் டூப்ளிகேட் கேசட் எனவும் பிரித்து வைத்திருப்பார்கள். அதாவது ஒரிஜினல் கேசட்டில் இருந்து காலியான கேசட்டில் பதிவு செய்து கம்மி விலைக்கு விற்பார்கள். மியூசிக்கல் ரெகார்டிங் கடையில் இதற்காக அலைந்தது பல நாளாகும். ஒரு காலியான கேசட் வாங்கி அதில் நமக்கு பிடித்தமான பாடல்களை காகிதத்தில் எழுதி கொடுத்தால் 2 முதல் 3 நாட்களுக்கு பிறகு வரச் சொல்வார்கள்.

பாடல்களை பதிவு செய்ய
மியூசிக்கல் ரெகார்டிங்
கடைக்கு அலைந்த
நாட்கள் அதிகம்!

நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்களிடம் வாங்கி வீட்டிற்கு சென்று டேப்ரிகார்டரில் பாடலை கேட்கும் சுகம் அடடா.! அந்த பாடல்களின் வரிசையை ஒரு காகிதத்தில் எழுத்தி கேசட் பெட்டிக்குள் போட்டு வைப்போம். இன்று இந்த பாடல் வேண்டாம் என்றால் ஒரு நொடியில் மாற்றி விட முடியும் ஆனால் அன்று அப்படி இல்லை பார்வேர்ட் என்ற ஒரு பட்டனை அழுத்தி அடுத்த பாடல் வரவரைக்கு காத்திருக்க வேண்டும் அதிலும் அதிகமாக பார்வேர்ட் அடுத்த பாடலில் பாதி சென்று விடும் மீண்டும் ரிவர்ஸ் செய்து கேட்க வேண்டும். அந்த பாடல்களை டேப் ரிகாடில் வீடே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tech

மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் பியூர் நிறுவனம்

Published

on

By

ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்’ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

‘பியூர்-பவர்’ கமர்சியல் எனும் தயாரிப்பு மூலம் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அமைப்புகள் எந்தவித இடைநிற்றலும் இன்றி இயங்கும். மேலும் இதனால் தொழில்நிறுவனங்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை நிலைப்படுத்தவும், ‘பீக் லோட்’ கட்டணங்களையும் பெருமளவு குறைத்திடவும் முடியும்.

‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அதனால் மின்சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த கட்டமைப்பில் 5ம் தலைமுறை மின் அமைப்புகள் உள்ளன. இதில் பி.சி.எம். (Nano Phase Change Material) எனும் தனித்துவம் கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த தயாரிப்பில் வெப்பநிலை மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்த தயாரிப்புகளின் செயல்பாடு மற்றும் வாழ்நாள் பல காலத்துக்கு நீடிக்கும்.

குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல், 100% தடையிலாதுஇயங்குவதை உறுதி செய்ய, இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும். மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாகவே அறிந்துகொள்ள முடியும்.

கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இனைந்து அறிமுகம் செய்துவைத்தார்.

இதுகுறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “இந்திய தொழில்நிறுவனங்களின் மின்சாரம் தொடர்பான முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பியூர் நிறுவனத்தின் குறிக்கோள். அதை மனதில் வைத்தே பியூர் பவர்-ரை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல்பாட்டு செலவு குறையும் படி உருவாக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.

‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு அதன் சேமிப்பு அளவை 25 KVA முதல் 100 KVA வரை அதிகரிக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ஒரு தொழில்நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனெரேட்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துடனும் தானாகவே இனைந்து செயல்படக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அமைப்பாக இது இருப்பதால் ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு அவசியமான, மின்சாரம் அதிகம் இழுக்கக்கூடிய கருவிகளை தொடர்ந்து இயக்கிக்கொள்ள முடியும், மற்றொரு பக்கம் மின்சாரத்தை சேமித்துக்கொண்டு இருக்கவும் முடியும்.’பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்கள் ‘பீக் ஹவர்’ இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேகரித்து வைத்து கொண்டு, பீக் ஹவர் நேரங்களில் சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு மிச்சமாகும்.

டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “நமது நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மாற்றங்களையும், அந்த நிறுவங்களுக்கு கணிசமான, மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என பாராட்டிப் பேசினார்.

பியூர் நிறுவனம் தொழில்நிறுவங்களுக்கு மட்டுமில்லாது இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை பியூர் பவர் ஹோம் என்ற பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Tech

87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

Published

on

By

2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் ஸ்டீரிங்க் இணைப்பில், பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் விற்பனையகமே தொடர்புகொண்டு கார்களை திரும்ப பெற்று, ஆராய்ந்து பழுதாக வாய்ப்புள்ள பாகத்தை எவ்வித கட்டணமின் மாற்றித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாருதி 2019 இல் எஸ்-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது. லிட்டருக்கு 25.3 கிமீ வரை எரிபொருள் செயல்திறனை வழங்கும் ஐடில்-ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 1-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2022 ஆம் ஆண்டில், மாருதி Eeco MPV இன் புதிய பதிப்பை ரூ. 5.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. புதிய Eeco 5 இருக்கை கட்டமைப்பு,

7 இருக்கைகள் இதில் அடங்கும் .

Continue Reading

Tech

ஆண்ட்ராய்ட்யில் சாட் ஜிபிடி ஆப் அறிமுகம் !

Published

on

By

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது இது மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட மிகவும் துல்லிய தன்மையுடன் தகவல்களை அளிப்பதுதான் மமுக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவை மக்கள் அனைவரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இணையத்தளம் மூலம் பயன்படுத்தி வந்த சாட் ஜிபிடியை தற்போது ஆண்ட்ராய்ட் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டுக்கான ChatGPT ஆப் இப்போது இந்தியா ,அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பிரேசில் கிடைக்கிறது. பிற நாடுகளுக்கு விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

Trending