Connect with us

Entertainment

திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!

Published

on

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம், டிஜெஏ சர்வதேச அமைப்பின் சார்பில் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் “மாலை முரசு” கு.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வே.பசுபதி வரவேற்புரையாற்றினார்.தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளரும், ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனருமான அ.சி.தென்னரசு அழகேசன் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. பத்மா மாரியப்பன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர். த.இரா.கவியரசு அவர்கள் கலந்து கொண்டு அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சேலம் ஏ.எம்.குழுமத்தின் இயக்குநர் “சேவைச் செம்மல்” ஐ.அதாம் பாஷா அவர்கள் பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்… தலைமை ஆசிரியர் திர.சிங்காரவேலு, சிலை அமைப்பு குழு திருவாளர்கள்: செல்வம்.தீர்த்தகிரி, த.திருஞானம், தி.திருமலைவாசன், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் திரு. சூர்யாதனபால், திமுக நகரச் செயலாளர் திரு. முல்லைரவி, பொதுக்குழுக் உறுப்பினர் திருமதி. கலைவாணி,ஆசிரியர் திரு.எ.கொ.அம்பேத்கர், நக்கீரன் செய்தியாளர் திரு.ஏ.அருண்பாண்டியன், குமுதம் இதழ் செய்தியாளர்
திரு. ஜி.கிருஷ்ணன்,இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநிலச் செயலாளர் டாக்டர்.அசோக் ஜி, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திரு.அ.இறையருள், ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளர் திரு.சையத்பாபு,புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. எஸ்.ஆர்.ரங்கநாதன்,

ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.எஸ்.செந்தில் குமார்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்.திருமதி. சரளாசண்முகம்,சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் திரு.தமிழ்குமரன், பாமக தருமபுரி (கி) மாவட்டத் தலைவர் திரு. கு.அல்லிமுத்து, அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் இரா.அயோத்திராஜ்,தேசியப் பொதுச்செயலாளர் தஞ்சை.கவிஞர் த.சுமித்ரா,தேசியச் செயலாளர் “மாலை முரசு” ம.ராஜாராம்,மாநில ஒருங்கிணைப்பாளர் “தமிழன் டிவி” மு.அருள்,மாநிலத் துணைச் செயலாளர் இரு.சங்கர்,மாநில துணை ஒருங்கிணைப்பாளர் நாமக்கல் இரா.நாகராஜ்,வடக்கு மண்டலச் செயலாளர் “கேப்டன் நியூஸ்” இரா. காளிதாஸ்,வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் “எவரெஸ்ட்” ஏ.விஜயமூர்த்தி,வழக்கறிஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வழக்கறிஞர்.நெப்போலியன்,கலை இலக்கிய அணி மாநிலத் தலைவர் Amb.Dr.ADB.வினோத் ராம் குமார்,தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் மா.இராமமூர்த்தி,தருமபுரி மாவட்ட நிர்வாகிகள்: தலைவரின் தனிச் செயலாளர் “அதிரடி” மா.ஆனந்த்குமார், மா.கார்த்திக், நந்தகுமார் ,புஷ்பலிங்கம்,அருண் பிரபு, முனியப்பன், வீரமணி, வழக்கறிஞர்.மாரியப்பன்,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சா.மதியழகன், மாவட்ட பொருளாளர் எம்.சி.அசோக், மாவட்ட இணைச் செயலாளர் தினசங்கு இரா. சுரேஷ்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கிருபாகரன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தீபநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர்,மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ தேவி, மா.ஆறுமுகம்.நாமக்கல் மாவட்டத் தலைவர் சீ. செந்தில்முருகன்,சேலம் மத்திய மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி,சேலம் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் நவ்சாத்,சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு,சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி வேலு,விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயமூர்த்தி,திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பா.சிவக்குமார்,
கோவை மாவட்ட கலை இலக்கிய அணி மாரியம்மாள்,திமுக மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் வெங்கடேசன், ரகுராமன்,நாகராஜ் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் , தமிழ் ஆர்வலர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்,

நிகழ்ச்சி நிறைவாக உள்ளாட்சி ரவுண்ட்ஸ் மாவட்டப் புகைப்படக் கலைஞர் விக்னேஷ் நன்றியுரையாற்றினார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

வசூல் சாதனையில் அஜித்தின் குட் பேட் அக்லி

Published

on

By

ஜித் குமார் நடிப்பில்,மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அஜித்தின் நடிப்பை பாராட்டி கோலாகலம் படுத்தி வருகின்றனர் . இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்த்துள்ளதால் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

 குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கம் நிரம்பி வழிகிறது, தொடர் விடுமுறை காரணமாக மேலும் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் வசூல் சாதனையாக 30 கோடி ரூபாய்யை அள்ளி ரெகார்ட் செய்துள்ளது ஜித்தின் குட் பேட் அக்லி படம்.

Continue Reading

Entertainment

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி பிரசாந்த் கூட்டணி!

Published

on

By

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரசாந்த், அதிரடி இயக்குனர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஹரியுடன் இணையும் இரண்டாவது  படமாகும். ஏற்கனவே தமிழ் என்ற படத்தில் இவ்விரு கூட்டணி இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது, சுமார் ​​24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இது செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகி உள்ளது

பிறந்தநாள் நாளில் முக்கிய அறிவிப்பு ! ‘கடைசியா அந்தகன்’ படத்தில் நடித்த பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களிடமிருந்து பல ஸ்கிரிப்ட்களை கேட்டு ஆராய்ந்து வந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது, ​​இந்த வரவிருக்கும் படம் அவரது 55 வது படத்தின் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கிறார் பிரசாந்த் ஒரு பிரபல இயக்குனருடன் மிக பெரிய மறுபிரவேசத்தைக் காண களமிறங்கியிருக்கிறார் நடிகர் பிரசாந்த் . தயாரிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார் .இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது , மற்ற முன்னணி மற்றும் துணை வேடங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

ரத்தினம்’ படத்திற்குப் பிறகு ! விஷாலை வைத்து ‘ரத்தினம்’ படத்தை இயக்கிய ஹரி, இடைவெளியில் பல்வேறு நடிகர்களுடன் கதை காண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அவர் இப்போது பிரசாந்தை கதையின் நாயகனாக இறுதி செய்துள்ளார். சூரியா, விக்ரம், சிம்பு, அருண் விஜய், விஷால் என பல ஹீரோக்களை வைத்து மாஸ் படம் கொடுத்த ஹரி டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து புதிய கதை கலத்துடன் காலத்தில் இறங்கியுள்ளார்.

Continue Reading

Entertainment

வேட்டையன் – விமர்சனம் !

Published

on

By

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ளது வேட்டையன் திரைப்படம்.

ஜெயிலர் போன்ற மாஸ் படத்தை கொடுத்த ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றப்போல் சிம்பிள் மாஸாக நடித்துள்ளார்.

ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள TJ ஞானவேல் அவரது அதே பணியில் முக்கிய கருத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பராக படமாக்கியுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களுக்குத்த தேவையான மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள், என கமர்சியலாகவும் டச் கொடுத்து சபாஷ் வாங்குகிறார்.

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் ரவுடிகளை சுட்டுத்தள்ளிக்கிறார் . குற்றத்துக்கு என்கவுண்டர் தான் தீர்வா? என கேள்வி எழ ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது அது பெரும் பிரச்சனை ஆக மாறுகிறது . அதனை கண்டுபிடித்து எதிரியை என்கவுண்டர் செய்கிறாரா? அல்லது சட்டப்படி தண்டனை வாங்கித்தருகிறாரா? என்பது தான் மீதி கதை. என்கவுண்டர் பற்றியும் நீட் தேர்வை வைத்து நடக்கும் மோசடிகளை வைத்து மாஸாக படத்தை கொடுத்திருக்கிறார் TJ ஞானவேல்.

இந்த படத்தின் ரஜினிகாந்த்க்கு அடுத்தது அதிகம் பேசப்படும் நபராக பஹத் பாசில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் ரஜினியுடன் வலம் வருகிறார் . அமிதாப் பச்சன் ,மாஞ்சு வாரீர், துஷார விஜயன், ராணா, ரோகினி, அபிராமி ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்.

அனிருத்தின் இசை ஜெயிலர் படத்துக்கு கை கொடுத்ததுபோல் இந்த படத்திலும் கை கொடுத்துள்ளது. மனசிலாயோ பாடல் ரசிகர்களை ஆட வைத்துள்ளது.

காமெடிக்கு இடமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது இருந்தாலும் பஹத் பாசில் நம்மை அங்கங்கே சிரிக்க வைக்கிறார் . படம் ஒரு சிறிய திரில்லர் திரைப்பட பாணியில் நம்மை நகர்த்தி செல்கிறது .

ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படமாக வடிவமைத்துள்ளார்  TJ ஞானவேல்.

E-Behind Movie Rating !

Continue Reading

Trending