Connect with us

நிகழ்ச்சிகள்

உடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – நடிகர் தாமு

Published

on

 

கோவையின் மிகப்பெரிய கோயம்புத்துார் மராத்தான்

போட்டிக்கான முன்பதிவு துவக்கம்

 இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது 

உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான  ஓட்ட பந்தய வீரர்கள் 

  கோயம்புத்தூர் மாரத்தானில் 

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது .

இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த  மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும்.  2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.விபாலகிருஷ்ணன் .பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருகிராந்தி குமார் பாடி ..எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம்பிரதாப்..எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார்.

பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம்.

 

ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு  ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ. 25,000 ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 ஆகும், அதேபோல 10 கி.மீ திறந்த பிரிவில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத் தொகையானது முறையே ரூ. 15,000 ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ஆகும்.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெடரன்களுக்கு, அரை மாரத்தான் ஓட்டத்திற்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு பரிசுத் தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும்.  10 கி.மீ ஓட்டத்திற்கு 7,500 மற்றும் 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருவிநௌஷாத், தனது உற்சாகத்தைத் தெரிவித்து கூறுகையில் “கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுக்கு ஆதரவளிக்க கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுடன் கைகோர்த்து 11 வது பதிப்பு கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த கூட்டிணைவு நிரூபிக்கிறது. உடல் திடம் மற்றும் நல்வாழ்வுக்கான நடைப்பயிற்சிக்கு ஆதரவாளரான வாக்கரூ, எங்கள் பிராண்டின் நோக்கப்பார்வையான (Point of View – POV) – “Walk With Walkaroo,” -க்கு இணங்க, இந்த நிகழ்வில் கூட்டு சேருவதில் பெருமிதம் கொள்கிறது.

பல ஆண்டுகளாக, நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்கி பங்காளர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவைப் பெற்று, கோயம்புத்தூர் மாரத்தான் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக வளர்ந்துள்ளது. நாங்கள் 11 வது பதிப்பைத் தொடங்கும்போது, எங்கள் பணியானது பந்தயத்திற்கு அப்பாற்பட்டு புற்றுநோய்க்கு எதிரான போராக முன்னேறுகிறது. புற்றுநோயைத் தடுப்பது, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வு முயல்கிறது. எங்கள் தேசிய பிரச்சாரத்தின் கருப்பொருளான “#WalkindiaWalk” ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கான வாக்கரூவின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. வாக்கரூவானது, உடற் திடம் மற்றும் நல்வாழ்வுக்காக நடைபயிற்சி செய்வதை உறுதியாக நம்புகிறது, மேலும் இந்த மாரத்தான் மூலம், புற்றுநோய்க்கு எதிரான போருக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்று கூறினார்.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் டி.பாலாஜி கூறுகையில் “கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி ஒரு முக்கிய நிகழ்வாகவும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் பிராண்டு தூதராகவும் மாறியுள்ளது. கோவிட் நெருக்கடிகள் இருந்த சமயத்திலும், நாங்கள் 2 மெய்நிகர் மராத்தான்களை நடத்தி, இடைவெளி இன்றி அதன் 11 வது பதிப்பில் நுழைந்துள்ளோம், இது கோயம்புத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளது. நகரின் குடிமக்கள் மற்றும் நகரத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாரத்தான் ரன்னர்களும் கூட இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எங்கள் பங்காளர்களில் பெரும்பாலோர் ஆரம்பத்தில் இருந்தே

எங்களுடன் இருந்துள்ளனர், மேலும் CCF செயல்படுவதற்கும், வலிமைக்கு மேல் வலிமை சேர்த்து வளர்வதற்கும் அவர்கள் அளிக்கும் தொடர்ச்சியான ஆதரவிற்காக

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

மனதை அலைபாய செய்யும் மொபைல் , சீரியல், சினிமாகளில் மாணவர்கள் மூழ்கிவிடக்கூடாது – தாமு !

Published

on

By

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அவர்களின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கு புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டியாக இருந்து வருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் நடிகர் தாமு அவர்கள் . இதுவரை, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில், தனது அற்புதமான சிந்திக்கும் உரையை வழங்கி ,ஆழ்மன பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக கோவை அவிநாசி, அ.குரும்பபாளையம், வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி சார்பில், கொங்கு கலையரங்கில் , ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடம் தனது உரையை வழங்கினார் நடிகர் தாமு .

நடிகர் தாமு பேசியது :

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், மதிப்பெண் குறைவதற்கும், தேர்வின் மீது பயம் வருவதற்கும் காரணம், மாணவ, மாணவியரின் இயலாமையோ, அறியாமையோ அல்ல; நேரத்தை வீணடிக்க செய்து, மனதை அலைபாய செய்யும் மொபைல் போன்கள், ‘டிவி’ சீரியல் கள், சினிமாக்களில் அவர்கள் மூழ்கிவிடுவது தான்.

அவற்றால் ஏற்படும் மனச்சிதைவுக்கு மருந்து கிடையாது; மாறாக, மன மாற்றமே முக்கியம். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உள்வாங்கி, ஆழ்மனதில் நிறுத்திக் கொள்வதால், வெற்றி சாத்தியமாகும். வலைதளங்களில் மனதை சிறைபடுத்தி, அடிமைப்பட்டு கிடக்கும் நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

இளைஞர்களின் ஆற்றல் அதிகமுள்ள நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில் 53.8 சதவீதம், அமெரிக்காவில், 58.8, சீனா, 54.9, ரஷ்யா, 59.1 சதவீதம் என்ற அளவில், இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. அதே நேரம், இந்தியாவில், 64.5 சதவீதம் இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலில், மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

மொபைல் போன்களில் விதம், விதமான செயலிகள் வழியாக, மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் மனதை பாழ்படுத்தும் செயல் என்பது, வெளிநாட்டு சதி என்பதை உணர வேண்டும்.

Continue Reading

கோயம்பத்தூர்

வி வொண்டர் வுமன் விருதுகள் 2023: பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்!

Published

on

By

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ வொண்டர் வுமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கற்பகம் அகாடமியுடன் இணைந்து , பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 14 பெண் சாதனையாளர்களை ஆகஸ்ட் 26 அன்று ஜென்னிஸ் ரெசிடென்சியில் வீ வொண்டர் வுமன் விருதுகள் வழங்கி கவுரவித்தது.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், Mrs.இந்தியா எர்த் 2018 வெற்றியாளர் ரிங்கி ஷா, அருண் , அரவிந்த் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்கள் விருதுகளை வழங்கினர்.பத்மஸ்ரீ விருது பெற்ற ஆர்.முத்துக்கண்ணம்மாள், மூத்த சதிர் நடனக் கலைஞர், வீ வொண்டர் வுமன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

25000 கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையான முறையில் பிரசவம் செய்ய வெற்றிகரமாக உதவிய GKNM மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமுதா கிரிதர் வீ வொண்டர் வுமன் ஐகான் விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.

அனைத்து விருது பெற்றவர்களும் துல்லியமான தேர்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் துணிச்சலான செயல்கள் மற்றும் அற்புதமான சாதனைகள் மூலம் சமூகத்தை ஊக்கப்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 

Continue Reading

Uncategorized

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா !

Published

on

By

ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், TRB ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குநர் சிவராஜா ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு கூறினார்.

Continue Reading

Trending