Connect with us

கோயம்பத்தூர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சிறந்த ஆட்சி – பிரதமர் நரேந்திர மோடி

Published

on

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது’

குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழ்நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை செய்தவர் எம்ஜிஆர்

அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்ஜிஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தனர்.

நல்லாட்சியை நடத்தி தமிழ்நாட்டிற்கு கல்வியையும் சுகாதாரத்தையும் கொடுத்துள்ளனர். நாடு வளரும்போது அதே வேகத்தில் தமிழ்நாடும் வளரும் என்பதே எனது உத்திரவாதம்.

தமிழ்நாட்டிலிருந்து ராணுவ தளவாடங்களைத் தயாரிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக .தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள்

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை

தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம்

தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்

தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது

தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக;

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள்

– பிரதமர் நரேந்திர மோடி.

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு துவக்கம்!

Published

on

By

சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக  வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் – உயர்கல்வி துறை K. கோபால் வெள்ளிக்கிழமை கோவையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு – தெற்கு பகுதியின் (CII SOUTHERN REGION ) சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024ல் (CII EDUTECH EXPO 2024) கூறினார்.

 

சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி (CII EDUTECH EXPO) மற்றும் அதன் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு இன்று கோவையில் நடைபெற்றது.இந்த மாநாடு நவம்பர் 15-16 கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.

 

இதன் துவக்க நிகழ்வில் K. கோபால்,   தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – கலந்து கொண்டு, சி.ஐ.ஐ.  மற்றும்  கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு  தயாரித்த உயர் கல்வி குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று,  உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

 

முன்னதாக சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதியின் தலைவர் R. நந்தினி, சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ.யின்  தெற்கு பகுதி முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர் நாராயணன் ராமசாமி, மற்றும் சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  உரையாற்றினர்.

 

 K. கோபால் அவர்கள் பேசுகையில், நிகழ்காலத்தில் உயர் கல்வி பாடத்துடன் தற்போது வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் அவசிய திறன்களை ஒன்றிணைக்க அரசு ‘விளைவுகளை மையப்படுத்தி கல்வி கற்பித்தல்’ எனும் முறையை பின்பற்றுகிறது என குறிப்பிட்டார்.

 

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்துறையுடன் கல்வி துறை கைகோர்த்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் போதே தொழிற்பயிற்சி (INTERNSHIPS), தொழில்துறை தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவது அவர்களை இப்போதே எதிர்காலத்திற்கு தயார் செய்வதுடன், நமது பொருளாதார வளர்ச்சியை மேம்பட செய்யவும் வழிவகுக்க கூடிய ஒன்றாக அமையும் என்றார்.

 

CII தெற்கு பகுதியின் தலைவரும் இந்த சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சியின் தலைவருமான ஆர்.நந்தினி தனது வரவேற்பு உரையில்,  உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திறமைமிகு பணியாளர்களையும், தலைவர்களையும் கோவையில் உள்ள நன்மதிப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளது என கூறினார். இங்கு நிலவும் சிறந்த கல்வி கட்டமைப்பு, பொறியியலும், தொழில்துறையும் ஒன்று சேர்ந்த செழிக்க வைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக கோவை திகழ ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

 

காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர் பேசுகையில், தொழில்த்துறைக்கு தயாரான, தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையே உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம் என்றார்.

 

இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில்  பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் தமிழகம் முனைப்புடன் செயல்படும்

Published

on

By

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பைத் தொடங்கவும், தனியார் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையைத் தொடங்கவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை (12.11.2024) அன்று கோவை வந்திருந்தார்.

அவர் ரூ.13 கோடி மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் சிஸ்டத்தை கோவை ஜிஹெச்சில் டாக்டர் நிர்மலா, சிஎம்சிஎச் டீன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சிலர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் இது இரண்டாவது எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பு இதுவாகும்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், 1-2 மாதங்களில், அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என்றார்.


மேலும்தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் வலுவான நடவடிக்கைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கொண்டு வருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஓராண்டுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் இதுவரை 109 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வருமாறு முதல்வர் 4 மாதங்களுக்கு முன்பு துறையிடம் கூறியிருந்தார். ஆரம்ப நிதியாக ரூ. மேலும் வெகுஜன காட்சிகளை நடத்த அரசு 26 கோடி ரூபாய் ஒதுக்கியது.

Continue Reading

Trending