Connect with us

Sports

வருகிறதா ஐபில் 2025 காண மெகா ஆக்ஷன்! வீரர்களை தக்கவைக்க முடியுமா ?

Published

on

2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வில்லை .

2022 ஐபிஎல் மெகா ஏலத்தில், அதிகபட்சமாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை அணிகளுக்கு ஐபில் நிர்வாகம் வழங்கியது. நான்கு வீரர்களும் 3 இந்தியர்கள் + 1 வெளிநாட்டு அல்லது 2 இந்தியர்கள் + 2 வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்பது விதி .தற்போது வீரர்களை தக்கவைத்துக் கொள்வதின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றாலும்,  இதில் மூன்று இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியினர் தக்க வைக்க முடியும் வெளிநாட்டு வீரர் 2 பேரை தக்க வைக்க முடியும் கூறப்படுகிறது.

இதற்கு பல அணிகள் ஆதரவு தெரிவித்தாலும் சில அணிகள் எதிர்க்கின்றனர்,காரணம் முக்கியமாக வீரர்கள் ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுத்து வாங்க நேரிடும். குறிப்பாக சென்னை, மும்பை இதற்கு எதிராகவே இருக்கும். ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் 3 வீரர்களுக்கு மேல் கொடுத்தால் அணியில் பெரிதான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்கவைப்பதை விரும்பவில்லை.

அதிகபட்ச 3 இந்திய வீரர்கள் என்ற கணக்கில் மட்டுமே தக்க வைக்க முடியும் என்றால், அது சில அணிகளுக்கு மகிழ்ச்சியானதாக அமையும். உதாரணமாக ராஜஸ்தானை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோரை தக்க வைக்க விரும்பும் காரணம் இவர்களை ஏலத்தில் விட்டால் மீண்டும் எடுப்பது கடினம் அதுமட்டும் இன்றி அதிக தொகைக்கு வாங்க நேரிடும். மற்ற அணிவீரர்களை ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுக்க நேரிடும்.

பஞ்சாப் கிங்ஸ் :

இந்த அணிக்கு தக்க வைக்க பெரிய அளவில் வீரராகள் இல்லை என்றாலும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மாவும் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர்களை தாண்டி வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கம் வாய்ப்பு சாம் கரண் மற்றும் ககிசோ ரபாடா இருக்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் முதலில் தக்கவைக்க விரும்பும் நபராக ஷுப்மான் கில் இருப்பார். இவரது சிறப்பான ஆட்டமும் கேப்டனனாக செயல்படும் முறையுமே முதல் வாய்ப்பாக இருக்கிறது. மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதை ஏற்கன

வே காட்டியுள்ளார். ஷுப்மான் கில் தவிர, முகமது ஷமியையும் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற வாய்ப்புகள் கேன் வில்லியம்சன், ரஷித் கான் ஆக இருக்கலாம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நீக்க முடியாத பெயராக வளம் வருவது விராட் கோலியின் பெயர். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் .இவரை தவிர இந்திய வீரர்களை தக்க வைக்க நிர்வாகம் விரும்புமா என்பது கேள்விக்குறிதான். 2024 சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ், மட்சுவெல் ஆகியோர் இடம்பெறலாம்

டெல்லி கேப்பிட்டல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் பொறுத்த மட்டில் விபத்து காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ரிஷப் பண்ட், 2024 சீசனில் மீண்டும் கேப்டனாக ப

தவியேற்று நடத்தி வருகிறார் இதனால் இவரது பெயர் முதலில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இவரைத் தவிர அக்சர் படேல், குலதீப் யாதவ் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள நிர்வாகம் விரும்பும் . டெல்லி அணி வெளிநாட்டு வீரர்கள் இடப்பெற கூடும் என எதிர்பார்பது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், மிட்செல் மார்ஷ் .

மும்பை இந்தியன்ஸ்:

அனைத்து தொடரில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2024 ஆம் தொடரில் தடுமாறி வருகிறது.ஐபிஎல் 2025க்கான வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகப்பெரிய தலைவலியைக் காணும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பை தக்கவைக்கப்படலாம், இவரைத் தவிர சூரியகுமார், பும்ப்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள். ரோஹித் ஷர்மா தக்கவைப்பது அவரது முடிவில் தான் இருக்கிறது. டிம் டேவிட் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2025 க்கு தக்கவைக்கப்படும் முதல் நபராக இருப்பது கேஎல் ராகுல் . கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என பல பொறுப்புகளை வைத்துள்ளார். இவரை தாண்டி இந்திய அணி வீரர்களில் ரவி பிஷ்ணோய் மயங்க் யாதவ் இடம்பெறலாம். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பெற வாய்ப்பு பூரான்,ஸ்டோனிஸ் இருக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

வரும் 2025 ஆவது ஐபிஎல் தோனி இல்லாத ஐபிஎல்லாக இருக்க கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில்
ஐபிஎல் 2025 க்கு சிஎஸ்கே தக்கவைக்கும் முதல் பெயர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகும். ருத்துராஜ் தவிர, பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே தக்க வைத்துக் கொள்ள விரும்பும். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் மெயின் அலி, பதிரான கிடைக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பெரும்பாலும் ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், வருண் சக்கரவத்தி ஆகியோரைத் தக்க வைத்துக் விரும்பும். மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டும். இந்த அணியில் முக்கிய வெளிநாட்டு வீரர்களாகப் பார்க்கப்படுவது ரஸ்செல், நரேன், ஆகியோரை தக்க வைக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இறுதியாக, 2024 சீசன்னில் சிறப்பாக விளையாடுவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய வீரர்கள் பெரிதாக இல்லை அபிஷேக் ஷர்மாவைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்புக் காட்டும். வெளிநாட்டு வீரர்களான ஃபினிஷர் ஹென்ரிச் கிளாசென் துவக்க அதிரடி வீரர் ஹெட் ஆகியோரை தக்க வைக்கும்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

ஐ.பி.எல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பு !

Published

on

By

ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ .

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வாய்ப்பு

தேதி மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்படும் மீதமுள்ள போட்டிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – பிசிசிஐ வட்டாரம்.

 

Continue Reading

Sports

ஒரு வழியாக வெற்றிப் பெற்ற சிஎஸ்கே !

Published

on

By

தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து ரஹானே 48 ரன்களும் ரசூல் -38 ரன்களும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அஹமது 4 விக்கெட் எடுத்தார் .

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 60/5 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ப்ரேவிஸ் 52 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே  45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர் முழுவதும் தனது சொதப்பலான ஆட்டத்தினால் ரசிகர்களை வெறுப்பேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி ஆறுதலாக இருந்துள்ளது .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதுபோல் கண்டிப்பாக உணரும். பவர் பிளேயிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ன் ஐந்து விக்கெட்டுகள் இழக்கச் செய்திருந்தாலும், நடு ஓவர்களில்சரியான திட்டம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அவர்கள் பிற போட்டிகளில் விளைவுகளை நம்ப வேண்டியுள்ளது. அதேசமயம், மீதி உள்ள போட்டிகளில் வென்றே ஆகவேண்டிய நிலைக்கு மாறியுள்ளனர்.

Continue Reading

Sports

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு !

Published

on

By

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார் . ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவிப்பு. இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும்  நிலையில் ரோகித் ஷர்மா ஓய்வு அறிவிப்பு .

அறிக்கையில் அவர் தெரிவித்தது

” அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை  பகிர விரும்புகிறேன். வெள்ளை உடையில் என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு பெரும் பெருமை. கடந்த ஆண்டுகளில் நீங்கள் அளித்த  அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோகித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வை அடுத்து எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டனுடன் களமிறங்குகிறது இந்தியா.

Continue Reading

Trending