Connect with us

செய்திகள்

பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்!பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி அல்லது அந்த தேதியை ஒட்டி திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஜூன் 4 தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்!

Published

on

By

முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க உள்ளது . இதில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. .ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

இதென்படி மக்கள் நீதி மயமத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளது உறுதி ஆகியுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

செய்திகள்

+2ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

Published

on

By

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்

93.76%  2022

94.03%.  2023

94.56%  2024

95.03%    2025

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்

தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்

மாவட்ட வாரியாக:

அரியலூர்: 98.82

ஈரோடு: 97.98

திருப்பூர்: 97.53

கோவை: 97.48

கன்னியாகுமரி: 97.01″

கணினி அறிவியலில் அதிகம் பேர் சென்டம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 9,536 பேர் 100 மதிப்பெண்கள்.

கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர்

வேதியியல் – 3,181 பேர்

கணிதம் – 3,022 பேர்

வணிகவியல் – 1,624 பேர்

கணக்கு பதிவியல் – 1,240 பேர்

Continue Reading

Trending