செய்திகள்

பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்!பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி அல்லது அந்த தேதியை ஒட்டி திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஜூன் 4 தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Click to comment

Trending

Exit mobile version