Connect with us

Sports

தொடர்ந்து சி.எஸ்.கே 4 வது தோல்வி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்

Published

on

ஐபிஎல் 18ஆவது சீசன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில், சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆரம்பம்முதலே அதிரடி காட்டிய பஞ்சாப் அணி தொடக்க வீரர் ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து அதிரடி காட்டி சென்னை அணி ரசிகர்களை மிரளச் செய்தது.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கிய சென்னை அணி அணி தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம் விளையாடினர் டேவன் கணவாய் 69 ரன்களும், ரவீந்திர 36 ரன்களும் எடுத்தனர் அணியின் கேப்டன் ருத்திராஜ் 1 ரன்களில் வெளியேற பின்னர் வந்த தூபே 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் . கடைசியில் இறங்கும் டோனி இந்த முறை 16 ஓவர் இருக்கும் பொது களமிறங்கி சில பௌண்டரிகளை விளாசினார் இருப்பினும் போதிய ஆட்டம் பத்தாததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை அணி . இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

மீண்டும் தோல்வி ! கேப்டன் மாறிய பின்னும் தொடரும் சோகம் !

Published

on

By

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே கே ஆர் எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 103/9 ரன்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இந்த இலக்கை துரத்திப் பிடித்தது. ஐபிஎல் 2025ல் ஆறு போட்டிகளில் சிஎஸ்கேவின் ஐந்தாவது தோல்வி இதுவாகும், மேலும் அந்த அணி 10 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சொந்த மண்ணில் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.

 

Continue Reading

Sports

தொடந்து நாலாவது வெற்றிப் பெற்ற டெல்லி அணி கேல் ராகுல் அதிரடி

Published

on

By

வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பெங்களூருவில் உள்ள M. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்று ஆர்சிபி அணிக்கு எதிராக பந்துவீச டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், சால்ட் ரன்-அவுட் ஆன பிறகு, ஆர்சிபி அணி சற்று தடுமாற அறபித்தது . டெல்லி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி 163 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இறுதியில் டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து தனது அணியைசரிவில் இருந்து காப்பாற்றினார்.

பின்னர் 164 ரன்கள் இலக்காக கொண்டு காலம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் தடுமாற்றினாலும் , KL ராகுல்ன் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது ராகுல் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார் .

இந்த சீசனின் ஐபிஎல்லில் இதுவரை தோற்காத அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல் அணி பெற்றுள்ளது .

அதே நேரத்தில் ஆர்சிபி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி ஆர்சிபி இரண்டு சொந்த மைதான ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RCB : 163/7 (20.0 overs)

Phil Salt 37 (17) |  Tim David  37 (20) 

 Kuldeep Yadav 2/17 (4) |  Vipraj Nigam 2/18 (4)

DC : 169/4 (17.5 overs) 

KL Rahul  93 (53) |  Tristan Stubbs 38 (23)

Bhuvneshwar Kumar  2/26 (4)  | Suyash Sharma  1/25 (4)

Continue Reading

Sports

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக. தோனி நியமனம்

Published

on

By

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக எம்.எஸ். தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வழிநடத்தி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதால் , இந்த முடிவு எடுக்கப்பட்டுள்க்கதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பால் பந்து தாக்கியதால் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார் ..
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் தலைமைப் பொறுப்பில் டோனி செயல்படுவார் .. என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்திராஜ் விலகளால் பெரும் பாதிப்பு அடையும் என சரிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மீண்டும் டோனி கேப்டன் பதவி ஏற்றுள்ளதால் வெற்றிக்கு திரும்பும் என காத்துக் கிடக்கின்றன சென்னை ரசிகர்கள்.

Continue Reading

Trending