ஐபிஎல் 18ஆவது சீசன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில், சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆரம்பம்முதலே அதிரடி காட்டிய பஞ்சாப் அணி தொடக்க வீரர் ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.
சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து அதிரடி காட்டி சென்னை அணி ரசிகர்களை மிரளச் செய்தது.
இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கிய சென்னை அணி அணி தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம் விளையாடினர் டேவன் கணவாய் 69 ரன்களும், ரவீந்திர 36 ரன்களும் எடுத்தனர் அணியின் கேப்டன் ருத்திராஜ் 1 ரன்களில் வெளியேற பின்னர் வந்த தூபே 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் . கடைசியில் இறங்கும் டோனி இந்த முறை 16 ஓவர் இருக்கும் பொது களமிறங்கி சில பௌண்டரிகளை விளாசினார் இருப்பினும் போதிய ஆட்டம் பத்தாததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை அணி . இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.