Connect with us

செய்திகள்

ஊழல்’ தான் – :,கூட்டணி அறிவிப்பு – கூட்டணி இடிபோல் இறங்கியுள்ளது!

Published

on

நேற்று அமித்ஷா சென்னை வந்து இஅதிமுயுடன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு சென்றார்.இந்த கூட்டணி குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திமு கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளனர் , ஆளாவர் கூறியிருந்தது

“அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

இதற்கு பதில் கூறும் விதமாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறியது “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடிபோல் வந்து இறங்கியுள்ளது!

மக்களின் பேராதரவோடு அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி வாகை சூடும்” எதிர்கட்சி தலைவர் – எடப்பாடி பழனிசாமி 

அரசியல்

தமிழக பாஜகவின் தலைவராக நைனார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்!

Published

on

By

பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். 

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை பாஜகவின் மாநிலத்தின் தலைவர்  பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.  இவரை எதிர்த்து யாரும் போட்டியில்லாத நிலையில் போட்டியின்றி  நயினார் நாகேந்திரன் தேர்வாகிறார் 

 நயினார்  நாகேந்திரன் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது (2001-06), அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டு போக்குவரத்து, தொழில்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை வகித்தார். 2011 ஆம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, ​​அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2006 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அந்த இடத்தை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்நயினார்நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.



Continue Reading

செய்திகள்

பா.ம.க.வின் தலைவர் நான் தான் – ராமதாஸ்!

Published

on

By

பா.ம.க.வின் தலைவர்  பொறுப்பை நானே கவனிக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை அறிவித்துள்ளார் .

மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

“தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue Reading

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Published

on

By

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Continue Reading

Trending