Connect with us

Entertainment

நினைவுகளை விட்டுச் செல்லும் டிலைட் திரையரங்கம்!

Published

on

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான். பல திரையாராகுங்கள் அதிகம் உருவான இடமும் இதுதான் . அன்று சினிமா மட்டுமே பொழுதுபோக்கை கொண்டு இருந்த கோயம்புத்தூருக்கு. பல திரையரங்கம் தான் தீனிபோட்டது. இப்படி சினிமா கொடிகட்டி பறந்த அந்தக் காலத்தில் கோவை வெரைட்டி ஹால் சாலையில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு என்ற பெருமையுடன் இடம் பிடித்தது டிலைட் தியேட்டர் .

முதல் திரையரங்கம் : 

1914 இல் சாமிகண்ணு வின்சென்ட் மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்டது இந்த திரையரங்கம் .திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி கோவை தியேட்டரில் காட்சிப்படுத்தி வந்துள்ளார் . வெள்ள நிற துணிகளை பயன்படுத்தி டென்ட் கொட்டகையும் அமைத்தார். இதை ஒரு கூடாரமாக அமைத்து சினிமா காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காலத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் டென்ட் சினிமா உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. “வெரைட்டி ஹால் ரோடுக்கு வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயர் இதன் மூலம் வந்தது, தற்போது டிலைட் ட் தியேட்டர் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டு வருகிறது. 1930 களில் பிரிண்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட திரைப்பட டிக்கெட்டுகளை வழங்கிய முதல் தியேட்டர் என்ற பெருமையை வெரைட்டி ஹால் திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் முயற்சியால் கிடைத்தது.

இந்த திரையரங்கில் முதன்முதலில் வள்ளி திருமணம் என்ற திரைப்படம் திரையிடப்படதாகக் கூறப்படுகிறது.பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், சிவகுமார்,ஜெமினி கணேசன் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையிடபட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரையரகமாக இருந்து வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளை கடந்த இந்த டிலைட் தியேட்டரில் கடந்த சில வருடங்களாக ஒரு சில பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது . அதைத்தொடர்ந்து சில பழைய படங்கள் திரையிடப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் டிலைட் தியேட்டரில் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

அழிக்க முடியாத நினைவுகள் : 

பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டு கால பழமை வாய்ந்த தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க பணிகள் துவங்கியுள்ளது. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட, ஒரு திரையரங்கம் அமைந்தால் இதன் பெயர் இன்னும் பல நூற்றாண்டு வாழும் என்பதே பலரின்கருத்து .

வளர்ந்து வரும் புதிய தொழினுட்பம், புதிய மாற்றம் போன்றவற்றால் தியேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் இடிக்கப்படுவது கவலை அளித்தாலும், காலத்தால் அழிக்க முடியாத பல நினைவுகளை இந்த திரையரங்கம் கொடுத்திருக்கிறது. இன்று குளு குளு அறையில் திரைப்படத்தை பார்த்து தராத மகிழ்ச்சியை அன்று சாதாரண தரையிலும், கட்டை நாற்காலிகளும் மின் விசிறியுடன் அளவற்ற மகிழ்ச்சியும் நினைவுகளையும் அளித்துள்ளதாக கூறுகிறார் அன்று இந்த திரையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர். பல சாதனைகளையும், நினைவுகளையும் சுமந்து வெற்றியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறது டிலைட் தியேட்டர் என்ற பொக்கிஷம்!.

—- எழுத்து, சதிஷ் குமார் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

வசூல் சாதனையில் அஜித்தின் குட் பேட் அக்லி

Published

on

By

ஜித் குமார் நடிப்பில்,மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அஜித்தின் நடிப்பை பாராட்டி கோலாகலம் படுத்தி வருகின்றனர் . இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்த்துள்ளதால் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

 குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கம் நிரம்பி வழிகிறது, தொடர் விடுமுறை காரணமாக மேலும் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் வசூல் சாதனையாக 30 கோடி ரூபாய்யை அள்ளி ரெகார்ட் செய்துள்ளது ஜித்தின் குட் பேட் அக்லி படம்.

Continue Reading

Entertainment

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி பிரசாந்த் கூட்டணி!

Published

on

By

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரசாந்த், அதிரடி இயக்குனர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஹரியுடன் இணையும் இரண்டாவது  படமாகும். ஏற்கனவே தமிழ் என்ற படத்தில் இவ்விரு கூட்டணி இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது, சுமார் ​​24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இது செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகி உள்ளது

பிறந்தநாள் நாளில் முக்கிய அறிவிப்பு ! ‘கடைசியா அந்தகன்’ படத்தில் நடித்த பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களிடமிருந்து பல ஸ்கிரிப்ட்களை கேட்டு ஆராய்ந்து வந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது, ​​இந்த வரவிருக்கும் படம் அவரது 55 வது படத்தின் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கிறார் பிரசாந்த் ஒரு பிரபல இயக்குனருடன் மிக பெரிய மறுபிரவேசத்தைக் காண களமிறங்கியிருக்கிறார் நடிகர் பிரசாந்த் . தயாரிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார் .இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது , மற்ற முன்னணி மற்றும் துணை வேடங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

ரத்தினம்’ படத்திற்குப் பிறகு ! விஷாலை வைத்து ‘ரத்தினம்’ படத்தை இயக்கிய ஹரி, இடைவெளியில் பல்வேறு நடிகர்களுடன் கதை காண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அவர் இப்போது பிரசாந்தை கதையின் நாயகனாக இறுதி செய்துள்ளார். சூரியா, விக்ரம், சிம்பு, அருண் விஜய், விஷால் என பல ஹீரோக்களை வைத்து மாஸ் படம் கொடுத்த ஹரி டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து புதிய கதை கலத்துடன் காலத்தில் இறங்கியுள்ளார்.

Continue Reading

Entertainment

வேட்டையன் – விமர்சனம் !

Published

on

By

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ளது வேட்டையன் திரைப்படம்.

ஜெயிலர் போன்ற மாஸ் படத்தை கொடுத்த ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றப்போல் சிம்பிள் மாஸாக நடித்துள்ளார்.

ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள TJ ஞானவேல் அவரது அதே பணியில் முக்கிய கருத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பராக படமாக்கியுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்களுக்குத்த தேவையான மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள், என கமர்சியலாகவும் டச் கொடுத்து சபாஷ் வாங்குகிறார்.

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் ரவுடிகளை சுட்டுத்தள்ளிக்கிறார் . குற்றத்துக்கு என்கவுண்டர் தான் தீர்வா? என கேள்வி எழ ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது அது பெரும் பிரச்சனை ஆக மாறுகிறது . அதனை கண்டுபிடித்து எதிரியை என்கவுண்டர் செய்கிறாரா? அல்லது சட்டப்படி தண்டனை வாங்கித்தருகிறாரா? என்பது தான் மீதி கதை. என்கவுண்டர் பற்றியும் நீட் தேர்வை வைத்து நடக்கும் மோசடிகளை வைத்து மாஸாக படத்தை கொடுத்திருக்கிறார் TJ ஞானவேல்.

இந்த படத்தின் ரஜினிகாந்த்க்கு அடுத்தது அதிகம் பேசப்படும் நபராக பஹத் பாசில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் ரஜினியுடன் வலம் வருகிறார் . அமிதாப் பச்சன் ,மாஞ்சு வாரீர், துஷார விஜயன், ராணா, ரோகினி, அபிராமி ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்.

அனிருத்தின் இசை ஜெயிலர் படத்துக்கு கை கொடுத்ததுபோல் இந்த படத்திலும் கை கொடுத்துள்ளது. மனசிலாயோ பாடல் ரசிகர்களை ஆட வைத்துள்ளது.

காமெடிக்கு இடமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது இருந்தாலும் பஹத் பாசில் நம்மை அங்கங்கே சிரிக்க வைக்கிறார் . படம் ஒரு சிறிய திரில்லர் திரைப்பட பாணியில் நம்மை நகர்த்தி செல்கிறது .

ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய படமாக வடிவமைத்துள்ளார்  TJ ஞானவேல்.

E-Behind Movie Rating !

Continue Reading

Trending