Entertainment

நினைவுகளை விட்டுச் செல்லும் டிலைட் திரையரங்கம்!

Published

on

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான். பல திரையாராகுங்கள் அதிகம் உருவான இடமும் இதுதான் . அன்று சினிமா மட்டுமே பொழுதுபோக்கை கொண்டு இருந்த கோயம்புத்தூருக்கு. பல திரையரங்கம் தான் தீனிபோட்டது. இப்படி சினிமா கொடிகட்டி பறந்த அந்தக் காலத்தில் கோவை வெரைட்டி ஹால் சாலையில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு என்ற பெருமையுடன் இடம் பிடித்தது டிலைட் தியேட்டர் .

முதல் திரையரங்கம் : 

1914 இல் சாமிகண்ணு வின்சென்ட் மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்டது இந்த திரையரங்கம் .திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி கோவை தியேட்டரில் காட்சிப்படுத்தி வந்துள்ளார் . வெள்ள நிற துணிகளை பயன்படுத்தி டென்ட் கொட்டகையும் அமைத்தார். இதை ஒரு கூடாரமாக அமைத்து சினிமா காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காலத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் டென்ட் சினிமா உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. “வெரைட்டி ஹால் ரோடுக்கு வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயர் இதன் மூலம் வந்தது, தற்போது டிலைட் ட் தியேட்டர் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டு வருகிறது. 1930 களில் பிரிண்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட திரைப்பட டிக்கெட்டுகளை வழங்கிய முதல் தியேட்டர் என்ற பெருமையை வெரைட்டி ஹால் திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் முயற்சியால் கிடைத்தது.

இந்த திரையரங்கில் முதன்முதலில் வள்ளி திருமணம் என்ற திரைப்படம் திரையிடப்படதாகக் கூறப்படுகிறது.பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், சிவகுமார்,ஜெமினி கணேசன் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையிடபட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரையரகமாக இருந்து வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளை கடந்த இந்த டிலைட் தியேட்டரில் கடந்த சில வருடங்களாக ஒரு சில பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது . அதைத்தொடர்ந்து சில பழைய படங்கள் திரையிடப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் டிலைட் தியேட்டரில் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

அழிக்க முடியாத நினைவுகள் : 

பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டு கால பழமை வாய்ந்த தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க பணிகள் துவங்கியுள்ளது. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட, ஒரு திரையரங்கம் அமைந்தால் இதன் பெயர் இன்னும் பல நூற்றாண்டு வாழும் என்பதே பலரின்கருத்து .

வளர்ந்து வரும் புதிய தொழினுட்பம், புதிய மாற்றம் போன்றவற்றால் தியேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் இடிக்கப்படுவது கவலை அளித்தாலும், காலத்தால் அழிக்க முடியாத பல நினைவுகளை இந்த திரையரங்கம் கொடுத்திருக்கிறது. இன்று குளு குளு அறையில் திரைப்படத்தை பார்த்து தராத மகிழ்ச்சியை அன்று சாதாரண தரையிலும், கட்டை நாற்காலிகளும் மின் விசிறியுடன் அளவற்ற மகிழ்ச்சியும் நினைவுகளையும் அளித்துள்ளதாக கூறுகிறார் அன்று இந்த திரையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர். பல சாதனைகளையும், நினைவுகளையும் சுமந்து வெற்றியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறது டிலைட் தியேட்டர் என்ற பொக்கிஷம்!.

—- எழுத்து, சதிஷ் குமார் 

Click to comment

Trending

Exit mobile version