அரசியல்

இணைந்த கைகள் ! ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு ! அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் இன்று சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர் . நடந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்பை அடுத்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் திருச்சியில் கடந்த மாதம் மாநாடு நடத்தினர் ஓ.பன்னீர்செல்வம் . அதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு தினகரன், சசிகலா கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை, இருப்பினும் அவர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வதிக்கு இருப்பதாக செய்திகள் உலவந்தனர். நேரம் வரும் பொழுது தினகரன் மற்றும் சசிகலா அவர்களை சந்திப்பேன் என கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஒரே லட்சியம்தான் அ.தி.மு.கவை மீட்டெடுப்பதுதான். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க காக்க ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘சி.பி.ஐ, சி.பி.எம் போல இணைந்து செயல்படுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். கட்சியை ஹைஜேக் செய்தவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். அ.தி.மு.க மீட்டெடுக்க வேண்டும் என்று நானும், சகோதாரர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம். என்றார் மேலும் “அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு” எனக் கூறினார். நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் அறிந்தவர்கள். எங்களிடம் மனதளவில் எந்த வெறுப்பும் இல்லை.. நாங்கள் சுயநலத்துடன் இணையவில்லை.. உண்மையான தொண்டர்கள் கையில் அதிமுக ஒப்படைப்போம்’ எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவர் தற்போது வெளியூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன். அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுச்செயலாளர் வழக்கு இன்னமும் நிறைவு பெறவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Trending

Exit mobile version