வியாழன் அன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது . முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை 23 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்குள் சுருட்டியது . குலதீப் யாதவ் 4 விக்கெட்டுகளை ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 115 என்ற எளிய இலக்கை எட்டுவதற்கு இஷான் கிஷன் மற்றும் சுப்பன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார் ரோஹித் சர்மா. வெறும் 7ரன்களில் வெளியேறினார் சுப்பன் கில் .அடுத்து வந்த சூரிய குமார் யாதவ் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட 19 ரன்களில் வெளியேற நேர்ந்தது மறுமுனையில் அதிரடி ஆட்டம் ஆடிய இஷான் கிஷன் 520ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா எளிய இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குட்கேஸ் மோதிஇரண்டு விக்கட்டும், சேல்ஸ் மற்றும் சருகு ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். 1- என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது.