மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சேப்பாக்க தொகுதியில் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி – குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் – மின்சார வாரியத்தின் அலுவலர்கள் – தூய்மைப்பணியாளர்கள் என 1600 பேருக்கு சென்னை மேற்கு மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் இன்று மதியம் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தூய்மைப்பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்டு கலந்து உரையாடினார்.