கட்டுரை / கதைகள்

கூலிக்குப் பின் மாறிய மனம்! சூப்பர் ஸ்டார் தந்த பாடம்!

Published

on

சுமார்  40 வயது கடந்து விட்டால் நமது மனதில் ஒரு தேவை இல்லாத எண்ணங்கள் ஓடித் துவங்கிவிடுகிறதுஎவ்வளவு நாள் இப்படியே ஓடி ஓடி உழைப்பது, எப்பொழுது நல்ல சம்பாதித்து எப்போது நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது.வாழ்நாள் முழுவதும் இப்படியே சென்றுவிடுமோ! என்ற எண்ணம் பலருக்கு வந்து விடுகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் கூட இதை குறிப்பிட்டு பேசினார் “நாட்கள் நகருகிறது எதையாவது சாதிக்க வேண்டும் என்று இருந்த என் மனம் 40 வயதை கடந்தவுடன் எதையாவது செய்தால் போதும் என்று மாறிவிட்டது நாம் செய்யும் வேலையில் பெரிய ஆர்வம் வருவதில்லை என்று புலம்பினார், நானும் இவர் சொல்வது சரிதான் வயதாக வயதாக நம் மனம் மாறிவிடும் போல என்ற நினைத்துக் கொண்டு, நம்மால் எதையாவது செய்ய முடியுமா சாதிக்க முடியுமா? இல்லை வாழ்கை இப்படியே சென்று விடுமா என்ற எண்ண ஓட்டத்துடன் இன்ஸ்டாகிரமை க்குள் நுழைந்து அதில் இருக்கும் போஸ்ட்கலை பார்த்துக் கொண்டிருந்தேன் . இன்று மாலை 6மணிக்கு சூப்பர் ஸ்டாரின் 171 படத்தின் டீஸர் மற்றும் டைட்டில் வெளியிட இருப்பதாக விளம்பரம் கண்ணில் பட்டது. கடிகாரத்தை பார்த்தேன் இன்னும் 5 நிமிடம் தான் இருக்கிறது, பின்னர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மூழ்கிய எனக்கு நேரம் ஆனது தெரியவில்லை 6 மணியை கடந்து சென்றது நேரம்.

சரி தலைவர் 171 படத்தின் டைட்டில் என்ன வென்றுப் பார்க்க யூடுப்புக்கு சென்று டீசரை பார்த்தேன், அப்ப அப்பா என்ன ஒரு ஸ்டைல், 73 வயதிலும் ஒரு கூலிங் கிளாஸ்சைப் போட்டு சிங்கம் போல நடந்து வருகிறார் சூப்பர் ஸ்டார், எதிரே நிற்கும் எதிரிகளை வழக்கம் போல தட்டி தூக்கி “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்!” என துவங்கி.. “எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே….” என பேசும் வசனம் தலைவா நீங்க வேற லெவல் என்று கூற சொல்கிறது.

டீசரைப் பார்த்து முடித்த பின்னர், என் மனது மண்டையில் ஒரு தட்டு தட்டி “அட மடையா இன்னும், நண்பர் ஒருவர் சொன்னதை எண்ணி நினைத்துக் கொண்டிருக்கிறாயா!, 73 வயதில் பணம், புகழ், அந்தஸ்து என அனைத்தையும் பெற்றிருந்தாலும் தான் செய்யும் தொழில் மேல் இருக்கும் பற்றாலும், ஆசையாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கம்பிரமாக வயதைப் பொருட்படுத்தாமல் உழைத்து வீர நடைப்போட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் நினைத்தால் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு வாழ்க்கையே ஓய்விலேயேக் களிக்கலாம், ஆனால் உழைக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு இளம் வயதிலேயே தோன்றியது, வெறிக்கு வயது வித்தியாசம் தெரியாது உழைத்துக் கொண்டே தான் இருக்கும், அதுதான் அவரது இமாலய வெற்றிக்கு கிடைக்கும் பரிசு. மீண்டும் எனது மனசு மண்டையில் ஒரு தட்டு தட்டி “டேய் எழுந்து ஓடு டா” வயதாவது மன்னாங்கட்டியாவது! என்றது.

நிஜம் தான் உழைப்புக்கும், வெற்றிக்கும் வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை சூப்பர் ஸ்டார் புரிய வைத்துவிட்டார் .

– சதிஷ் குமார்

Click to comment

Trending

Exit mobile version