ஆரோக்கியம்

40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு ?

Published

on

நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. பல தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறது. அதிலும் பாடல் கேட்காமல் இருப்பவர்களை விறல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர். இன்றைய இளைஞர் காதுகளின் ஹெட் போனுடன் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சியாக இருக்கிறது. அதிலும் அதிக சாத்தத்துடன் பாடல்களை கேட்கும் பொழுது தனி சுகம் தான் என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடுவதை பாடல்கள் நம்மை மறக்க செய்துவிடுகிறது.

உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்   ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாக கூறுகிறது. 2050 வாக்கில், உலகளவில் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100கோடிஇளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது.ஆரோக்கியமற்ற செவிப்புலன் நடைமுறைகளால் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் நிரந்தர காது கேளாமை ஏற்பட நேரிடும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.

பாதுகாப்பற்ற ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் – 24% செவித்திறன் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறது. அது மட்டும் இன்றி ஹெட்ஃபோன்கள் மூலம் அதிக சத்தத்துடன் கேட்பது நம் காதுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி நமது செவித்திறனை பாதிப்பதாக கூறப்படுகிறது.17% முதல் வரை 20 வயதிற் குட்பட்டவர்களில் இந்த அதீத சத்தத்தால் காது கேளாண்மை ஏற்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற கேட்கும் நடைமுறைகளால் காது கேளாமைக்கு ஆபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

 

Click to comment

Trending

Exit mobile version