ரோட்டரி மாவட்ட 3201 -ச் சேர்ந்த கோயம்புத்தூர் டவுன் ரோட்டரி சங்க 10-வது நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றது.
துணை ஆளுநர் கவிதா கோபாலகிருஷ்ணன், ஆளுநர் குழு நிர்வாகி வித்யா ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2026-ம் ஆண்டிற்கான மாவட்ட ஆளுநர் மாருதி முன்னிலை வகித்தார்.
தலைவராக டி. விவேகானந்தன், செயலாளராக சி.பிரபு ,பொருளாளராக எம். பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ,சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கு தனி மனது கொண்ட ரோட்டரி சங்கங்கள் தொடர்ந்து சேவையாற்றுவது பாராட்டத்தக்கது என்றார்.மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு,முன்னாள் தலைவர் பிரேம்குமார் முத்து உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்ட.விழாவில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் பொருட்களும், ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.