கிர்திலால்ஸ் நிறுவனம் தற்போது திருப்பூரில் வைரம் மற்றும் தங்க நகைக்கான பிரத்தியோக கிளையை ஏப்ரல் 16, 2025 அன்று குளோ என்ற பெயரில் நிறுவியுள்ளது . இது இந்தியா முழுவதும் பரவி வரும் கிர்திலால்ஸ் நிறுவனத்தின் ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது .
இந்த புதிய கிளை தொடக்கத்தின் மூலம், கிர்திலால்ஸ் நிறுவனம் தங்களின் அழகான, எடையற்ற மற்றும் பல்வேறு விதமான இயற்கை வைர நகைகளை, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான திருப்பூருக்கு கொண்டு வந்துள்ளது. பெண்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் பாரம்பரிய கைவினைத்திறனும், சமகால ஃபேஷன் உணர்வும் கொண்டவை.
“திருப்பூர் நகருக்கு ‘குளோ’ அனுபவத்தை கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இதன் ஆற்றலும், படைப்பாற்றலும் மற்றும் புதுமையான ஃபேஷன் உணர்வுகளாலும் பிரசித்திபெற்றது,” என கிர்திலால்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் – பிசினஸ் ஸ்ட்ராட்டஜி திரு. சுரஜ் சாந்தகுமார் கூறினார்.
“இந்த தொடக்கம் வைர நகைகளை எளிதாகப் பெறக்கூடியதாக மாற்றும், எங்கள் மிகப்பெரிய நோக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது . சிறந்த வடிவமைப்பு, தரம் மற்றும் தினசரி நயமிக்க தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் விற்பனை மையம் மட்டும் அல்லாமல், பெண்கள் தங்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் நகைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சிறப்பான இலக்கிடத்தை உருவாக்குகியுள்ளோம்
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய நகரங்களில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ‘குளோ கிர்திலால்ஸ்’ விற்பனை மையங்களின் வரிசையில் திருப்பூர் மாவட்டம் புதியதாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது