அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்ப்பது இயலாத காரியம். அரசியலில் இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதும், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதுதான். எம்.ஜி.ஆர் சிவாஜி கருணாநிதி, ஜெயலலிதா இன்னும் பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.இவர்களை அடுத்து யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்கள் என்ற திர்பார்ப்பு தொடர்கிறது. விஜய் வருவார் என பலராலும் பேசப்பட்டாலும் அது பேச்சாகவே இருந்து வருகிறது இந்த நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பபரிசு வழங்கும் நிகழ்ச்சி நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் மாணவர்களுக்கு பொதுவான அறிவுரைகளும், அரசியல் அறிவுரைகளும் சொல்லி அரங்கை அதிரச் செய்தார்.
என் நெஞ்சில் குடியிருக்கும், இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன்.நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.
நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது. ஒருவேளை… என்று தனது பேச்சை விஜய் நிறுத்தியதும் அரங்கம் அதிரும் அளவுக்கு சத்தம் விண்ணை முட்டியது ….அத விடுங்க …. அதன் ஏன் இங்க பேசிட்டு…. என பன்ச் வைத்து நிறுத்தினர். மீண்டும் தனது உரையை துவங்கிய விஜய் ” இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.
ஓட்டுக்கு பணம் வேண்டாம்
முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.
உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.