அரசியல்

மாநகராட்சி மேயர்களுக்கு மதிப்பூதியம் அறிவிப்பு!

Published

on

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

நகராட்சி மன்ற தலைவர்களுக்கு ₹15,000, துணைத் தலைவர்களுக்கு ₹10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ₹5000மும் மதிப்பூதியமாக வழங்கப்படும்; மேலும் பேரூராட்சி தலைவர்களுக்கு ₹10,000 பேரூராட்சி துணை தலைவர்களுக்கு ₹5,000 மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ₹2,500 மதிப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு!

தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.இக்கோரிக்கையினை பரிசீலித்து, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

Click to comment

Trending

Exit mobile version