மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும்.மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம் .சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் “- பிரதமர் மோடி
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இதயம் வலிக்கிறது என தனது வருத்தத்தை பதிவு செய்த செய்தார். மேலும் இந்த விவகாரத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என உறுதியளிக்கிறேன் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வலிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறனே். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்வத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது” னெ தெரிவித்துள்ளார்.