அரசியல்

பெரியார்- அண்ணா – ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் – முதல்வர்

Published

on

“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம்.

மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – சொத்துரிமையும் பொருளாதார உரிமையும் அளித்த தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்.

#கலைஞர்மகளிர்உரிமைத்_திட்டம் தேர்தல் அறிக்கையில் சொன்னோம்; இன்று தருமபுரியிலிருந்து தொடங்கி விட்டோம்.

தொப்பூர் முகாமில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வந்த சகோதரிகளுடன் உரையாடி, இந்தத் திட்டத்தால் அவர்கள் பெறப் போகும் பயன்களை அவர்கள் கூறக் கேட்டேன்; தன்னம்பிக்கை ஒளி அவர்களின் கண்களில் ஒளிர்ந்தது! அகம் மகிழ்ந்தேன்!

#கலைஞர்100 எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு . இந்தச் சாதனைச் சரித்திரம் தொடரும்! என தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவேற்றியுள்ளார்.

Click to comment

Trending

Exit mobile version