கோயம்பத்தூரில் வாகன நெரிசலை குறைக்க பெரும்பாலான இடங்களில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திருச்சி ரோடு ஒருபகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது .இதேபோல கவுண்டம்பாளையம் ஒரு பகுதியில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பாலமும் முடியும் தருவாயில் இருக்கிறது. தற்போது அவினாசி ரோட்டில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நெரிசலை குறைக்க சிங்காநல்லூரரில் பாலம் கட்ட ஏற்பாடுகள் செய்யப் படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தற்போது முதல் கட்டத்தை எட்டியுள்ளது
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நெடுஞ்சாலை துறை சார்பில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், EPC முறையில் தகுதியான ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் ஒரே நிலை இரண்டு கவர் முறையில் ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றனர்.