செய்திகள்

கோவையில் ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது !

Published

on

கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர்  ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ மீண்டும் வ உ சி பூங்கா மைதானத்தில்  ஜூன் 23 முதல் நடைபெற்று வருகிறது.  இதில் 30க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்பில் ஆழ்த்தும் சாகசங்கள். கோவை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் கண்டு களிக்கின்றனர். எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு இது புது அனுபவமாக உள்ளதாகவும் ,, பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகளை தொடர்ந்து இரவு 9.15  மணிக்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . கடந்த 45 நாட்களுக்கு மேல் பெரும் ஆதரவு பெற்று நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாம்பே சர்க்கஸ் நுழைவு கட்டணம் ரூ.100 முதல் ரூ 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு : 8893606308, 8778838082, 8714285256.
  

Click to comment

Trending

Exit mobile version