அரசியல்

என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம் – அன்புமணி கைது

Published

on

என்.எல்.சியை முற்றுகையிட்டு போராடிய அன்புமணி ராமதாஸ் இன்று கைது செய்யபட்டார்!

என்.எல்.சி-யை தமிழ்நாடு அரசு எதிர்க்காதது ஏன்? என்எல்சி 5 கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள். என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா?
ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம். எனவே அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்கக்கூடும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிரான பாமகவினரின் போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சில் 8 போலீஸார், 6 செய்தியாளர்கள் காயம்; கேமரா பொருட்கள் சேதம்!மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை !

 

 

Click to comment

Trending

Exit mobile version