Sports

கேப்டன் அவதாரம் ! செம கம்பாக் கொடுத்த பும்ரா !

Published

on

ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் காயம் காரணமாக 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள பும்ரா இந்திய அணியின் கேப்டனாக திரும்பியுள்ளார். மும்பையில் இதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஐபிஎல் சிறப்பாக செயல்பட்டு ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசி சாதனைபடைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரிங்கு சிங் அணியில் இடம்பெற்றுள்ளார் அதேபோல ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அயர்லாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

ஜஸ்பிரிட் பும்ரா (சி), ருதுராஜ் கெய்க்வாட் (விசி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (வாரம்), ஜிதேஷ் சர்மா (வி.கே.), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய். , பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்

காயத்தில் இருந்து திரும்பிய சக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம்ப்பிடித்துள்ளா.

திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடக்கும் டி20 போட்டியில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Trending

Exit mobile version