டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷுப்மான் கில் 85 ரன்களும், ஹர்திக் பாண்டியா, 70 ரன்களும், இஷான் கிஷன் 77 ரன்களும், சஞ்சு சாம்சன் 50 ரன்களும் எடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 351/5 ரன்களை எடுக்க உதவினார்கள்.
பின்னர் கடின இலக்கை எட்டிப்பிடிக்க இறங்கிய மேற்கிந்தியத் தீவு அணி ஆரம்பம்முதலே தடுமாற்றமான ஆட்டத்தை ஆடியத. முகேஷ் குமார் மற்றும் தாகூர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தாகூர் சிறப்பாக பந்துவீச்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குலதீப் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டியை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியிலும் 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது . இதனை அடித்து டி20 போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்க இருக்கிறது .