அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்அணைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது இந்த அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, பிஆர்ஜி அருண்குமார்.அம்மன் கே அர்ஜுனன்,ஏ.கே. செல்வராஜ், செ.தாமோதரன் வி.பி. கந்தசாமி, அமுல்கந்தசாமி முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநாடு தொடர்பாக கட்சினர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மகத்தான வெற்றி பெற அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கூறப்பட்டது.