நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் வழங்கிய லயன்ஸ் கிளப்!

Published

on

இந்திய சுதந்திரம் அடைந்து சுமார் 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று ஆகஸ்ட் 15 நாடுமுழுவதும் சுதத்ந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியில் நமது தேசியக்கொடியை ஏற்றினர். அதேபோல தமிழ்நாட்டில் முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி விழாவினை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாண்டியன் மெட்ரிக் பள்ளி:

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பாண்டியன் மெட்ரிக் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் லயன்ஸ் கிளப் சார்பாக மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் ஆப் களஞ்சியம் தலைவர் திரு.சரவணன் அவர்கள் கொடியேத்தி விழாவினை சிறப்பித்தார். மேலும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் திரு.கண்ணன், திரு.ராமமூர்த்தி, திரு.ராஜேந்திரன், திரு.ஞானசேகர், திரு.ராகவேந்திரன்,திரு.துரைசாமி, திரு.கிரண் விஜய்,திரு.ரங்கராஜ், திரு.சுரேஷ் பாபு,திரு.பிரகாஷ்குமார் , திருமதி.சௌமிய பிரகாஷ் குமார், திரு.சக்தி வர்ஷன், திரு.சக்தி ஹர்சன் மற்றும் பலர்பலரும் கலந்துக் கொணடு விழாவினை சிறப்புச் செய்தனர் .

Click to comment

Trending

Exit mobile version