Uncategorized

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா !

Published

on

ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், TRB ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குநர் சிவராஜா ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு கூறினார்.

Click to comment

Trending

Exit mobile version