ஆரோக்கியம்

வாழ்க்கையை ஈசியா வாழுங்க! – – சதீஷ்குமார் சந்திரசேகரன்

Published

on

பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையில் நன்மை, தீமை இவை இரண்டும் இல்லாமல் வாழ்கை அமையாது எல்லோரும் சோதனைகளைத் தாண்டித்தான் அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரவர் விரலுக்கு ஏற்றவாறு வீக்கம் இருக்கத் தான் செய்கிறது. இதை சுலபமாக கையாளத் தெரிந்தவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

என்று ஆங்கிலத்தில் அழகான வார்த்தைகள் மூலம் கூறியிருக்கிறார்கள். அதாவது,” நீங்கள் தேடும் மகிழ்ச்சி உங்களைச் சுற்றி இருக்கிறது, அதை கவனிக்க மறக்காதீர்கள்”. என்பது பொருள்.

நாய்,பூனை, ஆடு,மாடு மற்ற மிருகங்கள் தங்களது வாழ்க்கையை அன்றைய தினத்தை அனுபவித்து வாழ்கின்றன. அன்று கிடைக்கும் உணவையும், அன்பையும் அனுபவித்து மகிழ்கின்றனர். பிற உயிரினங்களுக்கும் துன்பம் வரத்தான் செய்கிறது அதை கடந்து தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது. ஆனால் மனித இனம் மட்டும், தமக்கு நல்லதே நடக்க வேண்டும் என எண்ணி அன்றாடம் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றான். போதிய உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாடு இருந்தும் சில நோய்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பாக திட்டமிட்டு ஒரு தொழிலைத் துவங்கினாலும் நஷ்டம் வருவதை தடுப்பது சாத்தியமில்லா ஒன்று. எல்லோருக்கும் நன்மை மட்டுமே நினைக்கிறேன் ஆனால் எனக்கு தீமைகள் வருகின்றது என்று நினைத்து மனதை காயமாக்கிக் கொள்வதில் என்ன பயன்.

The happiness you’re looking for is all around you,
don’t forget to notice it.

இயற்கை எப்பொழுதும் ஒரே மாதிரி நமக்கு கிடைப்பதில்லை, மழை, வெயில், பனி, புயல், பூகம்பம் என மாறுபட்ட இயற்கையை தான் நாம் அனுபவித்து வருகிறோம். மனிதருக்கு மட்டும் ஒரே மாதிரியான தன்மை இருக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?. வருவது வரட்டும் கிடைப்பது கிடைக்கட்டும் அனைத்தும் நன்மைக்கே! என புரிந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த கோல்டன் வாழ்க்கையை பிறருக்கு கெடுதல் நினைக்காமல், சந்தோஷமாக வாழ பழகினால், வாழ்க்கை ஈசியானதாக இருக்கும்.!

Click to comment

Trending

Exit mobile version