கோவையில் உள்ள கதிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் திரு சதீஷ்குமார் கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வை கல்லுரி மாணவர்களிடைய ஏற்படுத்தினார். பஞ்ச பூதங்கள் பற்றியும் நம் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் பற்றியும் மாணவர்களிடைய விளக்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் பேசிய அவர் நம் உடலில் 3கோடியே 50 லட்சம் நரம்புகள் உள்ளதாகவும் 72 ஆயிரம் நாடிகளே காற்று சஞ்சரிக்க பொருத்தமானவை என்றும் தெரிவித்தார்.
நமது உடல் சுமார் 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் ஆற்றல் கொண்டது எனக் கூறிய அவர், நம் உடலில் உள்ள 25 வாட்ஸ் மின்சாரத்தை உடல் முழுவதும் முத்திரைகள் மூலம் பரவச் செய்வது குறித்தும் உரை நிகழ்த்தினார்.
சாதாரணமாக மனிதர்கள் நிமிடத்திற்கு 16 முறை மூச்சை இழுத்து வெளியேற்றுவார்கள்.
அதை குறைத்தால் நோய் நொடியின்றி வாழ முடியும் என்றும், தினமும் யோகா அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார், வண்டியில் எப்படி ஆயில் மாற்றி சிறந்த முறையில் வைத்து கொள்வது போல் நாம் இரத்த தானம் செய்து நம் உடலை வலிமைப்படுத்துவதுடன் முகம் தெரியாத பல உயிர்களைக் காப்பாற்றிய நிகழ்வும் நடக்கும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.